டாப் 10லயே இந்த கம்பெனி இல்லையா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் சிறிய அளவு விற்பனை சரிவை சந்தித்துள்ளது.இது மட்டுமல்ல இந்நிறுவனம் கடந்த செடம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய சரிவு தான். இந்த சரீவு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாயில் கார் வாங்கும்போது இதை நோட் பண்ணுங்க!

இந்தியச் சந்தையில், ரூ.10 லட்சம் வரையிலான விலையில் ஏராளமான முன் சக்கர-டிரைவ் (FWD) கார்கள் கிடைக்கின்றன. ஹேட்ச்பேக்குகள், காம்பாக்ட் செடான்கள் மற்றும் எஸ்யூவி கார்கள் எனப் பல வகைகளில் மாருதி, டாடா, ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரபல மாடல்கள் இந்தப் பிரிவில் உள்ளன. எரிபொருள் சிக்கனமான நகர்ப்புறக் கார்கள் முதல் பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கார்கள் வரை இதில் அடங்குகின்றன. இந்த விலை வரம்பிற்குள் வரும் சில சிறந்த FWD கார்களை இங்கு காணலாம்.

தீபாவளிக்கு எல்லாரும் இந்த ஸ்கோடா காரை தான் வாங்குறாங்க!!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) 2025 செப்டம்பர் மாதத்தை வலுவான நிலையில் நிறைவு செய்தது. புதிய ஸ்கோடா கைலாக் எஸ்யூவி காரின் வெற்றி மற்றும் ஜிஎஸ்டி 2.0 வரித் திருத்தத்திற்குப் பிந்தைய விலைக் குறைப்புகள் ஆகியவற்றால் விற்பனை அதிகரித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வரிசையில் 8-வது இடத்திற்கு ஸ்கோடா முன்னேறியுள்ளது.

காரில் இருப்பது 24 கேரட் தங்கமா? இவர் செய்யக் கூடிய ஆளு தான்

இந்தியாவின் பிரபல பஞ்சாபி பாடகர்களில் மிகா சிங் முக்கியமானவர். மற்றொரு புகழ்பெற்ற பஞ்சாபி பாடகரான தலெர் மெஹந்தியின் தம்பியான இவருக்கு, சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 1.5 கோடிக்கும் அதிகமானோரும், யூடியூபில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இவரைப் பின்தொடர்கிறார்கள்.
Advertisement

6 மாசத்துல 85 ஆயிரம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் தற்போது காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்த கார் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது? என்ன சாதனை படைத்துள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ்நாட்டில் தென்பட்ட மர்ம கார்!

இந்திய சந்தையில் நிஸான் (Nissan) நிறுவனம் தற்போது தத்தளித்து கொண்டுள்ளது. நிஸான் நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 2 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும்.

கியாவின் இந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஒருத்தர் கூட இல்ல!!

கியா இந்தியா (Kia India) நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டு மொத்த கார் சந்தையின் 6% பங்கை கியா பெற்றுள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் 100இல் 6 பேர் கியா காரை வாங்கி உள்ளனர்.

வெறும் 20 நிமிஷத்துல அத்தன காரும் வித்துருச்சா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (2025 Skoda Octavia RS) கார், இன்று (அக்டோபர் 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

காரே இல்லன்னாலும் பார்க்கிங் வச்சு தான் வீடு கட்டனும்

தமிழகத்தில் தனி வீடு கட்டுவதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி இனி தனி வீடு கட்டுபவர்கள் கட்டாயம் கார் நிறுத்த பார்கிங் வசதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

5-ஸ்டார் ஓட்டல் பகுதியை அதிர விட்ட முகேஷ் அம்பானி குடும்பம்!

இந்தியாவின் முன்னணி பணக்காரக் குடும்பங்களில் ஒன்றான அம்பானி (Ambani) குடும்பம், தங்கள் பிரம்மாண்டமான கார் சேகரிப்புக்காகவே அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் கார் சேகரிப்பை வைத்திருக்கும் இவர்களின் தீபாவளி கொண்டாட்டங்கள் தற்போது களைகட்டி வருகின்றன.

சென்னையில் இருந்து பெங்களூர் போக 1 மணி நேரம் கூட ஆகாது!

வந்தே பாரத் ரயில்களின் (Vande Bharat Trains) வருகைக்கு பிறகு, இந்திய ரயில்வே வெகுவாக மேம்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் அதிவேகத்தில் பயணம் செய்கின்றன. இதன் காரணமாக பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சோதனை ஓட்டங்கள் நடைபெற்றபோது, வந்தே பாரத் ரயில்கள், மணிக்கு 183 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

காரை பார்க் பண்ணும் போது கவர் பண்ணாதீங்க!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. நாம் எல்லாரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறோம். தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்து புத்தாடைகள் அணிந்து பண்டிகையை கொண்டாடுவோம். இப்படியாக பட்டாசு வெடிக்கும் போது சாலையில் நிறத்தப்பட்ட வாகன்ஙகளில் பட்டாசு வெடித்ததால் பாதிப்பு ஏதுவும் ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்வதுசிறந்தது. இப்படியாக தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்து கொண்டாடும் போது வாகனங்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம்.
Advertisement

ஹைரைடர் காரில் ஏரோ எடிசனை அறிமுகப்படுத்திய டொயோட்டா!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor - TKM) நிறுவனம், அதன் பிரபலமான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) எஸ்யூவி காரில் புதியதாக 'ஏரோ எடிசன்' (Aero Edition) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டு உள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன், ஹைரைடருக்கு தனித்துவமான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.

இனி லைசென்ஸ் வாங்குறது ஈஸி கிடையாது!

மாருதி நிறுவனம்தமிழகத்தில் 20 ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் டிராக்குகளை கட்டமைக்க முடிவு செய்யதுள்ளது. இதனால் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான பயிற்சி மற்றும் சோதனையில் ஒரு கட்டமைப்பான மாற்றத்தை நோக்கி செல்ல இந்த டிராக் உருவாக்கப்படும் என தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

30 கி.மீ மைலேஜ் தரும் சிஎன்ஜி காரை வெளியிட்ட நிஸான்!

நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் காருக்கு டீலர்கள் பொருத்து ரெட்ரோ சிஎன்ஜி கிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ71,999க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கிட் ஏற்கனவே இருந்தாலும் அது மேனுவல் கியர் கார்களுக்கு மட்டுமே பொருந்தும்படி இருந்தது. தற்போது இது ஏஎம்டி கார்களிலும் பொருத்தக்கூடிய வகையில் மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாயில் அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் உடனான கார்கள்!!

கிரவுண்ட் கிளியரென்ஸ் (Ground Clearance) என்பது காரின் அடித்தளத்திற்கும், தரைக்கும் இடையேயான தூரம் ஆகும். இன்றைய காலத்தில் பலர் கார் வாங்கும்போது இதனை உன்னிப்பாக கவனிக்கின்றனர். ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களைத் தேடுபவர்களுக்கு, என்ட்ரி-லெவல் எஸ்யூவிகளும் சில முரட்டுத்தனமான தோற்றமுடைய ஹேட்ச்பேக்குகளும் சிறந்த தேர்வுகளாகும். இந்த பிரிவில் டாடா நெக்ஸான் அதிகபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக விளங்குகிறது. ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் காரில் புதியதாக அடாஸ் அறிமுகம்!!

டாடா நெக்ஸான் (Tata Nexon) காரில் அடாஸ் (ADAS) பாதுகாப்பு அம்சங்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நெக்ஸான் காரில் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் ஃபியர்லெஸ்+ (Fearless+) வேரியண்ட்டில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் என்ஜின் உடன் நெக்ஸான் ஃபியர்லெஸ்+ காரை டிசிடி (DCT) என்கிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்குபவர்கள் அடாஸை பெறலாம்.

கவாஸாகியின் புதிய இசட்900 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்திய கவாஸாகி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (India Kawasaki Motors), புதிய மை26 இசட்900 (MY26 Z900) மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற இசட்-சீரிஸின் பாரம்பரியத்தை இது தொடர்கிறது. கூர்மையான, அதிக ஆக்ரோஷமான 'சுகோமி' வடிவமைப்பையும், மேம்பட்ட மின்னணு உதவி அம்சங்களையும் இந்த பைக் கொண்டிருக்கிறது.

இந்த இவி காரை வாங்கி குவிக்க போறாங்க!

கியா நிறுவனம் தனது கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் எச்டிஎக்ஸ் இ மற்றும் எச்டிஎக்ஸ் இ (இஆர்) என்ற இரண்டு வேரியன்ட்களை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல விதமான வரவேற்ப்பை பெற்ற நிலையில் புதிய வேரியன்ட்களை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2,000 பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டரை வென்ற தமிழக நிறுவனம்

தமிழகத்தில் ஒரு சில அரசு பஸ்கள், மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பஸ் ஓடி கொண்டிருக்கும்போதே டயர் கழன்று ஓடிய சம்பவங்கள் நிறைய முறை நிகழ்ந்துள்ளன. அத்துடன் படிக்கட்டு போன்ற ஒரு சில பாகங்கள் மட்டும் தனியாக கழன்று விழுந்தது போன்ற சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளன.
Advertisement

இந்தியாவில் 4-ஸ்டார் வாங்கிய காருக்கு பிரேசிலில் 0-ஸ்டார்!!

பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சிட்ரோயன் பசல்ட் (Citroen Basalt) கார், சமீபத்திய லத்தீன் என்சிஏபி (Latin NCAP) மோதல் சோதனைகளின் முடிவில் பூஜ்ஜிய நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது. ஏனென்றால், இந்த சிட்ரோயன் கார் நம் இந்தியாவிலும் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவ்வாறான பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டு இருந்தது.

டாடாவுக்கு சங்கு ஊத போகும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்!

ஹூண்டாய் முதலீட்டாளர்கள் நாள் (Hyundai Investor Day) நிகழ்ச்சி, நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது. இதில், இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. வரும் 2030ம் ஆண்டிற்குள் ஹூண்டாய் நிறுவனம் 8 ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்யவிருப்பது இதில் மிக முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகும்.

விலையும் கம்மி! அம்சங்களும் அதிகம்!

டிவிஎஸ் நிறுவனம் நேற்று தனது அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 அட்வெஞ்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் ரூ1.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இநத் பைக் ஆஃப்ரோடு அம்சங்களை கொண்டுள்ளது. அதே நேரம் ஹைவேயிலும் சிறப்பா வெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் நேரடியாக கேடிஎம்250 அட்வெஞ்சர் மற்றும் மற்றும் யெஸ்டி அட்வெஞ்சர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.இந்த பைக்குகளின் ஒப்பீட்டை தான் இங்கே காணப்போகிறோம்.

டாடாவை கதற விட வரும் விலை குறைவான ஹூண்டாய் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு, இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

2 மாசத்துல இவ்வளவு லட்சம் பேர் பாஸ் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் சுங்கசாவடிகளை கடந்து செல்ல தனி நபர் வாகனங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வருடாந்திர பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்றுடன் இந்த பாஸ் அறிமுகமாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை 25 லட்சம் பேர் இந்த பாஸை வாங்கியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.