29 கிமீ மைலேஜ் தரும் மாருதியின் புது கார்! புக்கிங் குவியுது

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த செப்டம்பர் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக கடந்த செப்டம்பர் 4ம் தேதியில் இருந்தே மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜப்பான் கார் கம்பெனியை அசால்ட்டா நினைச்சிடாதீங்க...!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் நடந்து முடிந்த கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 518 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 6,394 யூனிட்களாகும். அமேஸ் (Amaze), சிட்டி (City) மற்றும் எலிவேட் (Elevate) கார்களுக்கான பண்டிகை கால தேவை அதிகரித்ததால், முந்தைய 2024 ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 15.3% வளர்ச்சி கண்டுள்ளது.

30 நாளில் 70 ஆயிரம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பைக் மாதிரி மைலேஜ்! வெறும் 5 லட்சத்துக்கு 6 பேர் போற காரா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஆம்னியின் (Maruti Suzuki Omni) விற்பனை நிரப்பப்பட்ட காரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை, மாருதி சுஸுகி ஈக்கோ மிகவும் வெற்றிகரமாக நிரப்பி வருகிறது.
Advertisement

22 வருஷமா இந்த காருக்காக தான் தவம் கிடந்தோம்!

டாடா நிறுவனத்தின் சியாரா கார் வரும் 25ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ள நிலையில் இந்த கார் குறித்த டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கார் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் மிகப்பெரிய புரட்சி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2003 வரை விற்பனையில் இருந்த காரை இந்நிறுவனம் மீண்டும் கொண்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் இருந்து இத்தனை நிறுவனங்கள் இதுல கலந்துக்குதா?

டூவீலர்களுக்காக பிரத்தியகமாக இத்தாலி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் EICMA என்ற கண்காட்சி நடந்து வரகிறது. இந்த கண்காட்சியில் ஏகப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும். இப்படியாக இந்தியாவில் உள்ள டாப் நிறுவனங்கள் கூட அந்த கண்காட்சியில் பங்கேற்கும். இப்படியாக இந்த 2025ம் ஆண்டிற்கான கண்காட்சி வரும் 4ம் தேதி துவங்ககிறது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த கார் ரோட்டுல போனா எல்லாரும் திரும்பி பாப்பாங்க!

ஹோண்டா நிறுவனத்தின் எலெவேட் கார் அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் காராக இருக்கிறது.இந்த கார் 4.2-4.4 மீ நீளம் கொண்டு எஸ்யூவிகார் செக்மெண்டில் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இந்த கார் அந்நிறுவனம் சமீபத்தில் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்திய 0 ஆல்ஃபா என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் பல்வேறு அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 0 ஆல்ஃபா கார் 2027ம் ஆண்டு இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழை காலத்துக்கு காரில் இது கண்டிப்பா இருக்கனும்!!

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையிலான கார்களில், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகியவை மழை-உணர் சென்சார் வைப்பர்களை (rain-sensing wipers) அதன் உயர் ரக வேரியண்ட்களில் வழங்குவதில் பிரபலமானவை. மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) போன்ற மற்ற கார்களும் குறிப்பிட்ட வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் வைப்பர்களை வழங்குகின்றன.

கமுக்கமா எல்லாரும் இந்த கம்பெனி காரை தான் வாங்குறாங்க!!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் பண்டிகைக் காலமான கடந்த 2025 ஆகஸ்ட்- அக்டோபர் மாதத்தில் மொத்த விற்பனையில் 2024 ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை செய்த கார்களை காட்டிலும் 20% வளர்ச்சி கண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இது அவர்களின் சந்தை இருப்பை உறுதிப்படுத்துகிறது. அதேபோல், 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த விற்பனையில் எம்ஜி 27% வளர்ச்சி அடைந்துள்ளது.

7 பேர் போகலாம் கி.மீக்கு வெறும் ரூ1 தான் செலவாகும்!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்ததயாராகி வருகிறது. இந்தகாரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி மற்றும் பெயர் வெளியாகியுள்ளது. மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இப்படியாக ஒரு கார் தேவை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த கார் அறிமுகமாகவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

31 நாளில் 9,675 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

நவம்பர் மாதம் பிறந்துள்ளநிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த விற்பனை விபரங்களை நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்நிறுவனம் 1 மாத்ததில் மொத்தம் 9.6 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் பெரும்பாலான கார்கள் வெளிநாடுகளுக்கு தான் ஏற்றுமதியாகியுள்ளது.இதனால் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைச்சதே டொயோட்டாவுக்கு தான் போல...!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் (TKM) 2025 அக்டோபரில் பெரும் விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பண்டிகைக் கால விற்பனையால் உந்தப்பட்டு, உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 2025 அக்டோபரில் டொயோட்டா மொத்தம் 42 ஆயிரத்து 892 கார்களை நிறுவனம் விற்றுள்ளது.
Advertisement

பொடி பையன்னு நெனச்சா பெரிய ஆளுங்களையே பொளந்துட்டு இருக்கான்!

இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது கியா (Kia). காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கியா இந்தியா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டே (Sales Report) இதற்கு சாட்சி.

தீபாவளிக்கு இத்தனை லட்சம் பேர் கார் வாங்கிடாங்களா?

நவம்பர் மாதம் துவங்கியுள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட துவங்கிவிட்டன. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்கள் விற்பனை செய்துள்ளது என்ற டாப் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

1990களில் கொடி கட்டி பறந்த கார் மறுபடியும் வருது!

நடப்பு 2025ம் ஆண்டின் அக்டோபர் மாதம் முடிவடைந்து, நவம்பர் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த நேரத்தில், கடந்த அக்டோபர் மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தற்போது தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

கேரள தொழிலதிபராக இருந்தாலும் கோவையில் புது கார் டெலிவிரி!!

லிட்மஸ்7 (Litmus7) தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வேணு கோபாலகிருஷ்ணன், சமீப காலமாக கோடிக்கணக்கான மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்குவதன் மூலம் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II பிளாக் பேட்ஜ் மற்றும் தீபாவளி சமயத்தில் வாங்கிய கேரளாவின் முதல் லம்போர்கினி ரெவல்டோ (Lamborghini Revuelto) ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது தனது கார் சேகரிப்பில் புதிய பி.எம்.டபிள்யூ எம்4 சிஎஸ் (BMW M4 CS) என்கிற செயல்திறன் மிக்க செடான் காரை சேர்த்துள்ளார்.

30 நாள் வெயிட் பண்ணா போதும்!

மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாரா என்ற காரை களம் இறக்க திட்டமிட்ட வருகிறது. இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதில் அந்நிறுவனம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த காரின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் நீண்ட நாட்களாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்து. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 புதிய கார்களை கொண்டு வரப்போகும் ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 30 கார்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஜப்பானில் நடந்து வரும் மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் இது குறித்த அறிவப்பை அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஹோண்டா நிறுவனம் பல்வேறு கார்களை அறிமுகப்படுத்துவது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபா காரில் இந்த வசதியை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

இந்தியச் சந்தையில் பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் தன்னிச்சையாக மடங்கி மூடிக்கொள்ள கூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் (ORVMs) கொண்ட பல கார்கள் தற்போது கிடைக்கின்றன. அதாவது, காரில் இருந்து வெளியே வந்து காரை லாக் செய்யும் போது இந்த மிரர்கள் தானாக மடங்கிக் கொள்ளும். இந்த கார்கள் பெரும்பாலும் ஹேட்ச்பேக்குகள், காம்பாக்ட் செடான்கள் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவிகளின் நடுத்தர அல்லது உயர் ரக வகைகள் என எல்லா விதமான கார்களிலும் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.

புது டுகாட்டி பைக்குகள் ஒவ்வொன்றின் விலையும் பல லட்ச ரூபாய்!

இந்தியாவில், டுகாட்டி (Ducati) நிறுவனம் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 (Streetfighter V4) பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பெயருக்கேற்ப வேகமான பயணங்களுக்கு ஏற்றதான டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டரில் ஸ்டாண்டர்ட் வி4 மற்றும் வி4 எஸ் என இரு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், ஸ்டாண்டர்ட் வி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.28.68 லட்சம் ஆகவும், வி4 எஸ் பைக்கின் விலை ரூ.32.38 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement

வெறும் ரூ25,000 குடுத்தா போதும்!

ஹூண்டாய் நிறுவனம் தற்போது தனது வென்யூ என்-லைன் காரின் புதிய தலைமுறை காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்த காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி நடந்து வருகிறது. இதற்காக ரூ25,000 முன்பணம் செலுத்தி இந்த காரை புக் செய்ய முடியும். இந்த காரின் வேரியன்ட் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

தொழிற்சாலை அமைக்க இடம் கொடுத்த தமிழ்நாட்டில் ஒரேயொரு ஷோரூம்!

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான வின்ஃபாஸ்ட் (VinFast)-இன் துணை நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா நிறுவனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 24 புதிய விற்பனை நிலையங்களை நிறுவி, தனது சில்லறை விற்பனை நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய நுகர்வோருக்கு சிறந்த எலெக்ட்ரிக் வாகன அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 35 விற்பனை நிலையங்களை அமைக்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

இரு குழந்தைகளுக்கு தாயான பின் எதுவும் சாதிக்க முடியாதா என்ன!

புனேவைச் சேர்ந்த 32 வயது டயானா பண்டோல் (Diana Pundole), இரண்டு குழந்தைகளின் தாய் மற்றும் கார் பந்தய வீராங்கனை ஆவார். இந்த நிலையில், உலக அளவிலான ஃபெராரி (Ferrari) பந்தயத் தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.

மாசம் வெறும் 266 கார் தான் விக்குது!

நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டிற்கான விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான விற்பனையில் அனைத்து நிறுவனங்களும் சிறப்பாக விற்பனைகளை பதிவு செய்துள்ள நிலையில் இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி நிறுவனத்தின் ஒரு கார் மிக குறைவான விற்பனையையே பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ்நாட்டில் மீண்டும் கோடிகளை கொட்டும் ஃபோர்டு!

அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு (Ford), தமிழ்நாட்டில் தனது சென்னை ஆலையில் புதிய எஞ்சின் உற்பத்திப் பிரிவைத் தொடங்க, மாநில அரசுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இது 600க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.