தேர்தல் பணிக்கு தனியார் காரை பறிமுதல் செய்ய முயற்சி?
ஆட்டோமொபைல்
- 4 hr, 59 min ago
இந்தியாவில் தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிக்காக, சட்டப்பூர்வ நடைமுறைகளின் கீழ் தனியார் வாகனங்களை அரசு நிர்வாகம் தற்காலிகமாக கையகப்படுத்தி பயன்படுத்திக் கொள்வது நடைமுறையில் உள்ளது. ஆனால், தேர்தல் பணிக்காக நள்ளிரவில் குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரின் சொந்த பயன்பாட்டு வாகனத்தை அங்குள்ள வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்ய முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.