சோலார் சன்ரூஃபை உருவாக்கிய FAW.. தினமும் 10 யூனிட் மின்சாரம்

எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கான சார்ஜிங் தேவையை குறைப்பதற்காக வாகன நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த FAW Group என்ற பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனம் தற்போது காரின் சன்ரூஃப் கண்ணாடியை மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனலாக மாற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். சென்னை நகரில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹோண்டா கார்களுக்கு ரூ.2.44 லட்சம் வரை சலுகை... முழு விபரம்

புதிய ஹோண்டா கார்களை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு செப்டம்பர் மாதம் கூடுதல் சேமிப்பை வழங்கும் வகையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹோண்டா அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய மூன்று மாடல்களுக்கும் கணிசமான ஆஃபர்களை பெறும் வாய்ப்பு உள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள சலுகைகளின்படி அதிகபட்சமாக ரூ.2.45 லட்சம் வரை சேமிப்பு பலன்களை பெறும் வாய்ப்புள்ளது.

ரூ.9 லட்சத்தில் வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவி சோதனை ஓட்டம்!!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி வரிசையை மேலும் விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய இரு மாடல்களுக்கு இடையில் புதிய மாடலை களமிறக்க உள்ளது. இந்த புதிய மிட் சைஸ் எஸ்யூவி இந்திய சாலைகளில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement

ரேஞ்ச்ரோவர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... 600கிமீ ரேஞ்ச்!!

உலக அளவில் பிரிமீயம் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ரேஞ்ச்ரோவர் முத்திரை பதித்த மாடலாக வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 56 ஆண்டுகளில் முதல்முறையாக தற்போது பேட்டரியில் இயங்கும் ரேஞ்ச்ரோவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை பெட்ரோல், டீசல் மற்றும் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடல்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது முதல்முறையாக பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ வெளியானது

இந்தியாவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்ற மாடல்களில் ஒன்றாக மிட்சுபிஷி பஜேரோ இருந்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த பிரபலமான ஆஃப்ரோடு எஸ்யூவி, தற்போது புதிய தலைமுறை மாடலாக மீண்டும் உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. விபரம்

பெங்களூரைச் சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் இந்தியாவின் குடும்பப் பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் புதிய மாடலுடன் களமிறங்கி உள்ளது. சிம்பிள் வேவ் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெட்ரோல் நிரப்பும் நேரத்திலேயே EV காருக்கு சார்ஜ்!!

எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு பலர் தயங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சார்ஜிங் நேரம். பெட்ரோல் அல்லது டீசல் கார்களில் சில நிமிடங்களில் எரிபொருளை நிரப்பிவிட்டு பயணத்தைத் தொடர முடியும். ஆனால், எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது.
Advertisement

மின்சார இருசக்கர வாகன சந்தையில் முதலிடத்தில் டிவிஎஸ்!!

இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஏத்தர் என முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து அசத்தி வருகின்றன. அதே நேரத்தில் ரிவர், பிகாஸ், சிம்பிள் எனெர்ஜி, மோட்டோவோல்ட் போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்களும் தங்களது இருப்பை வலுப்படுத்தி வருகின்றன.

தூத்துக்குடி ஆலையில் கார் உற்பத்தி தொடரும்: வின்ஃபாஸ்ட்

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கார் உற்பத்தித் திட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்நிறுவனம் முக்கிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஆலையில் VF 6 மற்றும் VF 7 எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் அசெம்பிள் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஏத்தர் கோனார்க் EV ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்ச் இதுதான்

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஏத்தர் கோனார்க் (Ather Konarc) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்ச் குறித்த முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு 70,000 வரை சலுகை

இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த காருக்கு ரூ.70,000 வரை சிறப்பு சலுகைகளை ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், புதிய கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Advertisement

'மேட் இன் இந்தியா' கார்கள் திட்டத்திற்கு வின்ஃபாஸ்ட் பிரேக்

இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை வேகப்படுத்தி வரும் வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 'மேட் இன் இந்தியா' திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்நிறுவனத்தின் VF3, VF6 மற்றும் VF7 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு இந்திய உதிரிபாகங்களை அதிகபட்சம் பயன்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சப்ளையர்களுக்கு அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏத்தர் ஸ்கூட்டர் வாங்க 4 மாதம் காத்திருக்கணுமா?

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனர்ஜி, ஆர்டர்கள் குவிந்து வருவதை சமாளிக்க முடியாமல் சப்ளை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்நிறுவனத்தின் பிரபலமான ரிஸ்டா உள்ளிட்ட மாடல்களுக்கு தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஸ்கூட்டர்களை டெலிவரி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மஹிந்திரா கார்களுக்கு செம டிமாண்ட்.. ஆகஸ்ட்டில் 50% வளர்ச்சி

மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை வளர்ச்சி வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக எஸ்யூவி கார் பிரிவில் வலுவான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனத்தின் மொத்த எஸ்யூவி கார் விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்துடன் மொத்த வாகன விற்பனையும் 1.07 லட்சம் யூனிட்டுகளை கடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மொத்த வாகன விற்பனை 42 சதவீத அதிகரித்துள்ளது.

மோடி–புதின் பயணித்த காரின் பாதுகாப்பு ரகசியங்கள்!!

பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் பயணித்த காட்சிகள் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றுள்ளன. கிர்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச நாடோடி விளையாட்டுப் போட்டிகளுக்கு பிஷ்கேக் அரேனா அரங்கிற்கு இரு தலைவர்களும் சென்றபோது பயன்படுத்தப்பட்ட இந்த கார் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. ஆரஸ் செனட் (Aurus Senat) என்ற இந்த பிரம்மாண்ட காரில் எக்கச்சக்கமான பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களை கலந்து கட்டி உருவாக்கி இருக்கின்றனர்.
Advertisement

ரூ.8 லட்சத்தில் சிறிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி?

இந்தியாவில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்றால், தற்போது டாடா டியாகோ EV முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், மாருதி சுஸுகியும் இந்த பிரிவில் நேரடியாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் சிறிய எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

200 கி.மீ ரேஞ்ச்... ஆம்பியர் எலெக்ட்ரிக் பைக் ரெடி?

மின்சார இருசக்கர வாகன சந்தையில் இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஆம்பியர் நிறுவனம், அடுத்ததாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவிலும் கால் பதிக்க தயாராகி வருகிறது. இதன் பகுதியாக அந்நிறுவனத்தின் ஸைபர் (Xyber) என்ற புதிய எலெக்ட்ரிக் பைக்கிற்கு இந்தியாவில் காப்புரிமைக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

காரில் ஏசி போட்டு தூங்குவதால் ஆபத்து? உயிரை பறிக்கும் அபாயம்

கார் பயணத்தில் களைப்பு ஏற்படும்போது, சாலையோரம் அல்லது பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு ஏசியை ஓடவிட்டு சிறிது நேரம் தூங்குவது பலருக்கும் சாதாரண விஷயமாக உள்ளது. குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஜன்னல்களை மூடிவிட்டு ஏசியை இயக்குவது பாதுகாப்பானதாகவே தோன்றும். ஆனால் இதுவே சில சூழ்நிலைகளில் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும்.

தமிழக அரசு சலுகையால் எலெக்ட்ரிக் காருக்கு பல லட்சம் மிச்சம்!

பண்டிகை காலம் நெருங்கிவிட்டாலே புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் பல குடும்பங்களில் அதிகரிக்கும். குறிப்பாக E20 பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது குறித்தும் பலரும் யோசித்து வருகின்றனர்.
Advertisement

பெரிய எஸ்யூவி போல மாறிய புதிய ரெனோ க்விட் கார்!!

பட்ஜெட் கார் வாங்குபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருக்கும் ரெனோ க்விட் கார் பல்வேறு மாற்றங்களுடன் தற்போது பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2027 மாடலாக வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய க்விட் கார் வெளிப்புற தோற்றத்தில் மட்டுமல்லாமல், கேபினிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவிலும் இந்த புதிய ரெனோ க்விட் கார் விரைவில் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

விலை குறைவான ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம்!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தை வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் குறைவான விலை கொண்ட காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது HE1i என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு கீழான ரகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஹோண்டா UC3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை!

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதிய மாடல்களை வரிசை கட்டி அறிமுகம் செய்யும் முனைப்பில் ஹோண்டா உள்ளது. அதன்படி, தனது யுசி3 (UC3) எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். தற்போது வியட்நாம் மற்றும் தாய்லாந்து நாடுகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவிலும் காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாசு அளவு அதிகரித்தால் பைக்கின் வேகத்தை குறைக்க திட்டம்!

இந்தியாவில் வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு அளவைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், எதிர்காலத்தில் பெட்ரோல் இருசக்கர வாகனங்களில் மாசு அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டினால், வாகனத்தின் வேகத்தை தானாகவே குறைக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
Advertisement

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் வருகிறது ரெனோ ட்ரைபர் 7 சீட்டர்!

ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் காரில் இருந்த பெரிய குறை நீங்கப்போகிறது. அதாவது, அதிக சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் விரைவில் ரெனோ ட்ரைபர் கார் வர இருக்கிறது. ரெனோ ட்ரைபர் கார் 7 சீட்டர் மாடலாக இருந்தாலும், அதில் தற்போது வழங்கப்படும் பெட்ரோல் எஞ்சின் போதுமான பவரை வெளிப்படுத்துவதாக இல்லை என்ற குறை இருந்து வருகிறது.