எம்ஜி கார்களை வாங்குவதா வேண்டாமா? மீண்டும் வரும் விலை உயர்வு

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் நாம் எதிர்பார்த்ததை போல் வருகிற ஜூலை மாதம் முதல் இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே நம் இந்திய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்தாலும், கடந்த சில வருடங்களாக தான் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மூலமாக இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில், இந்த புதிய விலை அதிகரிப்பு கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இனி இந்த வண்டி தான் செம கெத்து!

ஹோண்டா நிறுவனம் தனது ரெபெல் 500 க்ரூஸர் மற்றும் எக்ஸ்- ஏடிவி ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களின் டெலிவரியை இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த வாகனங்கள் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாகனங்கள் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

குறைந்த செலவில் கார் சர்வீஸ் செய்ய சரியான நேரம் வந்தாச்சு!

ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் என்றால், ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான கார் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. கடந்த சில மாதங்களாக மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தால் கார்கள் விற்பனையில் சற்று பின்தங்கினாலும், ஹூண்டாயை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கார்கள் விற்பனை குறைவை சரிசெய்யும் முயற்சிகளில் ஹூண்டாய் ஏற்கனவே இறங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக ஹூண்டாய் அறிவித்துள்ள மழைக்கால சேவை முகாமை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

முன்னாள் முதலமைச்சர் என்று எந்த பரிதாபமும் பார்க்கல!!

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான டொயோட்டா கார் என சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக, நம் நாட்டில் ஃபார்ச்சூனர் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக உள்ளது. ஆனால், அதன் சற்று அதிகப்படியான விலையினால் சிலரால் மட்டுமே ஃபார்ச்சூனர் காரை சொந்தமாக்க முடிகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் இந்தியாவில் ரூ.45.61 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களின் தரமான உடலமைப்பினாலும், சொகுசான பயணத்தினாலும் கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட அவசரத்திற்கு தேவைப்படும் என ஃபார்ச்சூனர் காரை வாங்குகின்றனர்.
Advertisement

2026ல் ஆட்சி மாற்றம் உறுதியா? டாடா-வின் ரகசிய பிளான்!

டாடா மற்றும் ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனம் சேர்ந்து தமிழகத்தில் ராணிபேட்டை பகுதியில் புதிய வாகன கட்டுமான ஆலையை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு முதல் இந்த ஆலையில் தயாரிப்புகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆலையில் வேறு என்ன வாகனங்கள் எல்லாம் தயாரிக்கப்படவுள்ளன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இளம் வயதில் இந்த லம்போர்கினி காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்!

லம்போர்கினி (Lamborghini) கார்களை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். உலகளவில் பல லம்போர்கினி கார் பிரியர்கள் பரவலாக நிறைய இடங்களில் உள்ளனர். ஆனால், நம் நாட்டில் லம்போர்கினி கார்களை மிகவும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் மிகவும் இளம் வயதில் தொழிலதிபர் ஒருவர் லம்போர்கினி ரெவால்டோ (Lamborghini Revuelto) காரை வாங்கியுள்ளார். யார் இந்த இளம் இந்திய தொழிலதிபர் என்பதையும், இவர் வாங்கியுள்ள லம்போர்கினி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். அபிஷேக் அகர்வால் (Abhishek Agarwal) இந்த பெயரை சமீப காலமாக நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அதுக்குள்ள ஷோரூமுக்கு வந்தாச்சா... ஹோண்டா சிட்டி ஸ்போர்ட்!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனத்தில் இருந்து புதியதாக சமீபத்தில் சிட்டி ஸ்போர்ட் (City Sport) கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபலமான ஹோண்டா சிட்டி காரின் புதிய விலைமிக்க டாப் வேரியண்ட்டாக சிட்டி ஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.89 லட்சம் மற்றும் ரூ.14.97 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் காரை பற்றிய விபரங்களை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்த நிலையில், சிட்டி ஸ்போர்ட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கி உள்ளன. இதனை உறுதி செய்யும் படங்கள் ஹோண்டா ஷோரூம் ஒன்றில் இருந்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆப் இருந்தா மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

உலகிலேயே சாலை விபத்துக்களால் (Road Accidents) அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்திய சாலைகளில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு மட்டும் 1.50 லட்சம் முதல் 1.80 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement

மகன் கேட்டதும் ஸ்கூட்டருக்காக ரூ.12 லட்சம் வாரி இரைத்த தந்தை

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டர், எக்ஸ்-அட்வ் (X-ADV) என்கிற அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர் ஆகும். இதனை ஸ்கூட்டர் என்றே சொல்ல முடியாத அளவிற்கு பெரிய அளவிலான தோற்றத்துடன் பார்ப்பதற்கு பைக் போன்று உள்ளது. இதனாலேயே இத்தகைய ஸ்கூட்டர்களை மேக்ஸி-ஸ்கூட்டர் என அழைக்கின்றனர். இவ்வாறான மேக்ஸி-ஸ்கூட்டர்கள் பல பிராண்ட்களில் உலகின் பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவிற்கு இத்தகைய ஸ்கூட்டர்கள் ஏற்றவையாக இருக்காது என்கிற தயக்கத்தினாலேயே பல முன்னணி 2-வீலர்கள் கூட மேக்ஸி-ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயக்கம் காட்டி வந்தன.

சென்னைல டிக்கெட் எடுக்க இனி க்யூல நிக்க வேணாம்!

சென்னையில் மெட்ரோ, பஸ், ஆட்டோ, கேப் உள்ளிட்ட வாகனங்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்க புதிய ஆப்பை தமிழக அரசு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஆப்பிற்கான சோதனைகள் ஏற்கனவே துவங்கிய நிலையில் அடுத்த மாதம் இது பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன ஆப்? இதை எப்படி பயன்படுத்துவது? இது மக்களுக்கு எந்த வகையில் பலனளிக்கவுள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய ஆல்டோ!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.23 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ1 தான் செலவு!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் களம் இறக்கப்போகும் ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான குறைந்த விலை பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த திட்டம் அதிகமான விலையில் இருந்த நிலையில் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஷோரூமுக்கு வந்த கணவரை திக்கு முக்காட செய்த பாலிவுட் நடிகை!

காஷ்மேரா ஷா (Kashmera Shah), 1990களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை. குறிப்பாக, திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு நடிப்பதை காட்டிலும் குறிப்பிட்ட சில பாடல்களுக்கு நடனமாடவே காஷ்மேரா ஷா அதிகமாக அழைக்கப்பட்டார். இந்தி மொழி படங்கள் மட்டுமின்றி, மராத்தி, தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு கூட பாடலுக்கு நடனமாட நடிகை காஷ்மேரா ஷா அழைக்கப்பட்டார். ஆனால், கடந்த சில வருடங்களாக இவருக்கு திரைப்பட துறையில் பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், விருந்தினராகவும் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

தினமும் 700 பேர் இந்த காரை தேடி தேடி வாங்குறாங்க!

பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 கார் 10 லட்சம் கார்கள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவும் மிக குறுகிய காலத்தில் இந்த சாதனையை அந்நிறவனம் படைத்துள்ளது. மக்கள் அதிகமாக இந்த காரை தேர்வு செய்ய என்ன காரணம்? இந்த காரில் அப்படி என்ன இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடைசியில் சீனாவிடமே கையேந்துவது தான் ஒரே வழியா?

உலகில் பல உலோகங்கள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் இதுவரை கேள்வியே படாத உலோகங்கள் எல்லாம் கூட பல்வேறு தொழில்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, தொடர்ந்து அதிகரித்துவரும் தேவைக்காக புது, புது தனிமங்களை உருவாக்கி, அதன் மூலம் உலோகங்களை உருவாக்கும் ஆய்வு கண்டுப்பிடிப்புகளும் ஒருபக்கம் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலமாகவே, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தன என்பது பெரிய கதை ஆகும். எலக்ட்ரிக் வாகனங்களினால் பல நன்மைகள் உள்ளன. அதேநேரம் சில அசவுகரியங்களும், சில பற்றாக்குறைகளும் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

எகிறி அடிக்க போகும் டாடா! கலக்கத்தில் மாருதி!

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இதன் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.
Advertisement

ஆட்டோமெட்டிக் காரில் பிரேக் ஃபெயிலியரை எப்படி சமாளிப்பது?

நீங்கள் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள் அப்பொழுது திடீரென காரில் பிரேக் ஃபெயிலியராகி விடுகிறது. அப்பொழுது காரை நிறுத்த வேண்டும் என்றால் பலரும் சொல்வது காரின் கிளட்சை மிதித்து கியரை டவுண் செய்து காரின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் மேனுவல் கியரே இல்லாத ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது விரிவாக காணலாம் வாருங்கள்.

டெஸ்லா கார் ஷோரூம் அமையும் இடம் சிட்டியில் படு பிசியான ஏரியா

டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். அமெரிக்காவை தாண்டி வெளிநாடுகள் பலவற்றில் டெஸ்லாவுக்கு மார்க்கெட் உள்ளது. இவ்வளவு ஏன், சீனாவில் கூட டெஸ்லாவுக்கு கஸ்டமர்கள் உள்ளனர். பொதுவாகவே அமெரிக்க கார் நிறுவனங்கள் சீனாவில் நுழைவது இல்லை; அதேபோல், சீன கார் நிறுவனங்களும் அமெரிக்காவில் நுழைவது இல்லை. இதற்கு காரணம் என்ன என்பது உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், டெஸ்லா நிறுவனம் சீன நாட்டு மார்க்கெட்டிற்குள் நுழைந்தது மட்டுமில்லாமல், சீனாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது.

எமன் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பித்த அதிசய மனிதர்கள்...

சமீபத்தில் ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆன அடுத்த சில நிமிடங்களில் பூமியில் மோதியது, இந்த சம்பவத்தில் விமானத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே விமான விபத்திலிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் உலகையே உலுக்கி போட்டுள்ளது. இப்படியாக உலகம் முழுவதும் இதற்கு முன்னர் நடந்த விமான விபத்துகளில் தனி ஆளாக உயிர் தப்பியவர்கள எத்தனை பேர்? அவர்கள் மட்டும் எப்படி தப்பினார்கள்? விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து புதிய எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆக ஹெரியர்.இவி (Harrier.ev) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா நிறுவனத்தின் புதிய விலைமிக்க எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஹெரியர்.இவி-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 23ஆம் தேதி இந்த டாடா எலக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Bharat NCAP Crash Test)-இல் உட்படுத்தப்பட்டு, தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.
Advertisement

போலீஸ் பாதுகாப்போட 10 கோடி ரூபா கார்ல மாஸ் காட்றாரு!

இந்திய சாலைகளில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார் மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). இது கடந்த 1984ம் ஆண்டு முதல் முறையாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 35 ஆண்டுகள் விற்பனையில் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஹாரியர் இவி காரை விட கர்வ் இவியில் இவ்வளவு கிடைக்குமா?

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் வேரியன்ட் வாரியிலான விலை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் அந்நிறுவனம் விற்பனை செய்யும் கர்வ் இவி காரை விட பிரிமியம் விலையில் இதை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. கர்வ் இவி காரின் டாப் மாடல் விலை இந்த காரின் பேஸ் மாடல் விலையை விட வெறும் ரூ50,000 தான் அதிகமாக உள்ளது. இங்கு நாம் கர்வ் காரின் டாப் மாடலில் உள்ள அம்சங்களையம் ஹாரியர் இவி காரின் பேஸ் மாடலில் உள்ள அம்சங்களையும் தான் ஒப்பீடு செய்யப்போகிறோம்.

ஹோண்டா ஆக்டிவாவுக்கு ரூ.14 லட்சம் செலவு எல்லாம் ரொம்பவே ஓவர்

ஃபேன்சி நம்பர் பிளேட் (Fancy Number Plate) கலாச்சாரம் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. உலகளவில் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கு கோடிக்கணக்கில் செலவழித்து வந்தாலும், இந்த விஷயத்தில் நம் இந்தியர்கள் கொஞ்சம் கட்டுப்பாடு உடனே செயல்பட்டு வந்தனர். அதாவது, ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்கு சில ஆயிரங்கள் வேண்டுமாயின் செலவழிக்க தயார், ஆனால் பல கோடிகளில் செலவழிக்க பெரும் பணக்காரர்கள் கூட தயாராக இல்லை. சில இலட்சங்களிலேயே விருப்பமான ஃபேன்சி நம்பர் பிளேட் இந்தியாவில் கிடைத்துவிடுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த 2 இடத்துல மட்டும் ஈரான் குண்டு போட்டா கதையே முடிஞ்சுது!

உலகில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணம். இதன் காரணமாகவே உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.
Advertisement

ரோல்ஸ்-ராய்ஸ் உருவாக்குன எலக்ட்ரிக் கார் என்றால் சும்மாவா!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனத்திற்கும் அதன் கார்களுக்கும் அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் உலகளவில் பிரபலமாக உள்ளன. பிரபலமாக இருப்பது மட்டுமின்றி, ரோல்ஸ்-ராய்ஸ் கார் வைத்திருந்தாலே தனி கௌரவம் என செல்வந்தர்கள் பலர் நினைக்கும் அளவுக்கு ஒரு ஸ்டாண்டர்டை ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் செட் செய்து வைத்துள்ளன. இதனால்தான், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) சுமார் 10க்கும் மேற்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்துள்ளார்.