மொபைல் போன் கம்பெனி உருவாக்கிய காருக்கு பயங்கர டிமாண்ட்!!

சுருக்கமாக எம்.ஐ (mi) என அழைக்கப்படும் சியோமி (Xiaomi) நிறுவனத்தை நம்மில் நிறைய பேருக்கு மொபைல் போன் (Mobile Phone) கம்பெனியாக தான் தெரியும். ஆனால், இந்த நிறுவனத்தில் இருந்து சிறிய ரக கை கடிகாரத்தில் இருந்து பெரிய அளவிலான ஆட்டோமொபைல் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கை தலைமையிடமாக செயல்படும் சியோமி நிறுவனம் கார்கள் உற்பத்தியில் சில வருடங்களுக்கு முன்பே இறங்கிவிட்டது. தற்போது இரண்டாவது கார் சியோமி நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் அல்ல, சீனாவில்.

டீசல் காரில் நீரை நிரப்பினால் இத்தனை பிரச்சனை வருமா?

இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் நீர் கலந்து மோசடியாக விற்பனை செய்யப்படுவதாக கடந்த பல காலமாகவே வாகன ஓட்டிகளிடம் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்கு மத்திய அரசும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும், சில பெட்ரோல் பங்க் நிலையங்கள் செய்யும் மோசடிகளை கட்டுப்படுத்தவே முடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெட்ரோல் பங்க்குகள் செய்யும் இந்த மோசடி அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில் மாநில முதலமைச்சரின் தலையிலேயே கை வைத்துள்ளனர். மத்திய பிரதேச மாநில முதலமைச்சருக்கு என்ன நடந்தது என்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நமது செய்தித்தளத்தில் கூட அதனை பற்றி விரிவாக பதிவிட்டு இருந்தோம்.

மாருதி, டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இந்த கார் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம்தான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த காருக்கு 6 வயதாகி விட்டது. எனவே இந்த காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் தயாராகி வருகிறது.

9 ஏர்பேக், அடாஸ் இருந்தும் உசுர காப்பாத்த முடியல!

இன்று கார்களில் விபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்காகவும், விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காகவும் பல அம்சங்கள் வந்துவிட்டன.இந்நிலையில் 9ஏர்பேக்குகள், அடாஸ் தொழிற்நுட்பம் என பல அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்ட கார் சமீபத்தில் விபத்தில் சிக்கிய தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழிந்துள்ளார். அவரது மகன் மோசமான நிலையில் சிகிக்சைக்காக தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

லம்போர்கினி கார் வாங்கும் சந்தோஷம் பெருசா யாரிடமும் இல்ல!!

லம்போர்கினி (Lamborghini) கார்களை யாருக்கு தான் பிடிக்காமல் போகும். நம் அனைவருக்குமே எதாவது ஒரு லம்போர்கினி கார், கனவு வாகனமாக இருக்கிறது. ஆனால், லம்போர்கினி கார் கனவை பெரும் பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்களும் தான் நிஜமாக்குகின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு விலைமிக்கவை ஆக லம்போர்கினி கார்கள் விளங்குகின்றன. இதனால், லம்போர்கினி கார்களை வாங்குபவர்களின் உடை அலங்காரமே அவர்களது பொருளாதார நிலையை வெளிக்காட்டக் கூடியவைகளாக இருப்பது வழக்கம். அதாவது, நன்கு டிப்-டாப்பாக கோர்ட் ஷூட் அணிந்தப்படி லம்போர்கினி காரை கஸ்டமர்கள் டெலிவிரி பெறுவர்.

3 செகண்டில் 100கிமீ வேகத்தை எட்டும் மெர்சிடிஸ் கார்!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அவ்வப்போது புது, புது கார்கள் அறிமுகம் செய்யப்படுவது வாடிக்கையானதே. ஏனெனில், அந்த அளவிற்கு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா முக்கியமான சந்தையாக விளங்குகிறது. நம் நாட்டில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ் முதலிடம் வகிக்கிறது. பொதுவாக, மெர்சிடிஸ் கார்கள் மூன்று விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. பென்ஸ், ஏஎம்ஜி (AMG) மற்றும் மேபக் (Maybach) என்பன அவை ஆகும். இதில், மெர்சிடிஸ்-மேபக் கார்கள் மிகவும் விலைமிக்கவை ஆக விளங்குகின்றன. ஏஎம்ஜி மற்றும் மேபக் என இரண்டும் இணைந்த மெர்சிடிஸ்-மேபக் ஏஎம்ஜி கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

சொகுசு காரை வாங்கி ரூ15 லட்சத்தை ஈஸியாக ஏமாற்றிய ஆசாமி!

கார் வாங்குபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்பது மோட்டார் வாகன சட்டம். இந்தியாவில் காஸ்ட்லியான கார்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் காஸ்ட்லியான கார் வாங்கிய ஒருவர் வரியை குறைப்பதற்காக ஃபிராடு வேலையில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது. இதை இவர் எப்படி செய்தார். இதனால் இவருக்கு வரி எவ்வளவு குறைந்தது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வந்தது யார் கார்னு தெரியாம வேலையை காட்டிய பெட்ரோல் பங்க்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) மிகவும் அதிகமாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இது போதாது என்று, பெட்ரோல் பங்க்குகளில் நிறைய மோசடி சம்பவங்கள் (Petrol Bunk Frauds) நடைபெற்று வருவதாகவும் வாகன உரிமையாளர்கள் நீண்ட காலமாகவே புகார் தெரிவித்து கொண்டுள்ளனர்.
Advertisement

ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கனு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

துல்கர் சல்மான் (Dulquer Salmaan), இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் பிரபலமான மலையாள நடிகர். தமிழ்நாட்டிலும் இவருக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. நடிப்பது மட்டுமில்லாமல், தந்தை மம்முட்டியை போன்று விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளை அவ்வப்போது வாங்குவதை வாடிக்கையாக கொண்டவர் நடிகர் துல்கர் சல்மான் ஆவார். சொல்லப் போனால், அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) என்கிற எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் உற்பத்தி நிறுவனத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் பங்குத்தாரர்களில் முக்கியமானவராக உள்ளார்.

70 வயசுல ஊரையே மிரள விட்ற கார்ல போறாங்க!

மலையாளம் மற்றும் ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலர் தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சமயத்தில், தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகள் பலர், ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் மிகவும் வெற்றிகரமான நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

இப்படி ஒரு யோசனை திருடனுக்கு எப்படி வந்திருக்கும்!

ரோட்டில் பார்க் செய்யப்பட்டிருந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வீல்லை திருடர்கள் இரவோடு இரவாக திருடி காரை வீல் இல்லாமல் எந்த சப்போர்ட்டும் இல்லாமல் ரோட்டில் வைத்து சென்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்வம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அஜித்துக்கே டஃப் கொடுப்பாங்க போல.. பைக் டிரிப்பில் நடிகர்கள்

விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக இருக்கும். ஆனால், இதனை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால், செல்வந்தர்களும், சினிமா பிரபலங்களும் மட்டுமே ஆகும். குறிப்பாக, சில சினிமா பிரபலங்கள் மக்களோடு மக்களாக கலந்து வாழ வேண்டும் என்பதற்காகவே கார்களை காட்டிலும் பைக்குகளை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில், அப்போதுதான் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு பைக்கில் எங்கு வேண்டுமானாலும் சுத்தலாம் அல்லவா... அவ்வாறுதான் தற்போது இரு சினிமா நடிகர்கள் (Cinema Actors) பைக்கில் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர்.
Advertisement

வெறும் ரூ29,999 எலெக்ட்ரிக் வண்டியா?

கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எக்ஸ்ஆர்1 எலெக்ட்ரிக் மொபட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வெறும் ரூ29,999 என்ற விலையில் இந்த மொபட் விற்பனக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு டீசர்ல இவ்வளவு குறியீடு இருக்குதா?

மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தனது புதிய கார் தயாரிப்பு பிளாட்ஃபார்மை வெளியிட திட்டமிட்டுள்ளது.இந்த புதிய பிளாட்ஃபார்மில் எதிர்காலத்தில் வரப்போகும் மஹிந்திரா கார்கள் தயாராக போகிறது. இந்நிலையில் இந்த பிளாட்ஃபார்ம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெயர் மட்டும்தா இந்தியன், ஆனா பக்கா அமெரிக்கன் பைக் கம்பெனி!

இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle), பெயர் மட்டும்தான் இந்தியா, ஆனால் இது அமெரிக்க பைக் நிறுவனம் ஆகும். எவ்வாறு இந்த நிறுவனத்துக்கு 'இந்தியன்' என்கிற பெயர் வந்தது என்பது எல்லாம் தனி கதை. ஐரோப்பாவில் தோன்றிய மோட்டார்சைக்கிள்களை முதன்முதலில் அமெரிக்காவில் உருவாக்கி விற்பனை செய்ய ஆரம்பித்தவர்கள் வைத்த பெயர் தான், இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆகும். அமெரிக்காவில் பைக்குகள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவிலும் அதன் சில பைக்குகளை விற்பனை செய்கிறது. இந்த நிலையில் தற்போது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்தியன் பைக்குகள் என்னென்ன, அவற்றின் விலைகள் எவ்வளவு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் செய்த காரியத்தால் ஆட்டம் கண்டு போன இரயில்வே போலீசார்!

கார் விபத்துகளுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை திறந்தாலே குறைந்தது ஒரு கார் விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இந்த இடத்தில் நாங்கள் கார் விபத்தை மட்டுமே சொல்கிறோம். மற்ற வாகன விபத்துகளை எல்லாம் கணக்கிட்டால் எண்ணிக்கை எங்கேயோ போகும். கார் விபத்துகளை மட்டும் ஏன் குறிப்பிட்டு சொல்கிறோம் என்றால், இன்றைய கால மாடர்ன் கார்களில் ஏர்பேக் (Airbag), அடாஸ் (ADAS) என ஏகப்பட்ட பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அப்படியிருந்தும் கார் விபத்துகள் நடைபெறுகின்றன என்றால், நிச்சயமாக அவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
Advertisement

60 நொடிகளில் 171 கார்கள் சர்வீஸ் பண்ணிட்டாங்க!

மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் சர்வீஸிங்கில் புதிய சாதனை மைல் கல்லை பதித்துள்ளுது. அதன்படி அந்நிறுவனம் 31 நாளில் 24.5 லட்சம் வாகனங்களுக்கு சர்வீஸை வழங்கியுள்ளது. அந்நிறுனம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடி மாட்டு விலையில் களமிறங்கும் 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார் கடந்த மே மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஐசி இன்ஜின் மாடல் ஆகும். இதை தொடர்ந்து இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

1.85 டன் சரக்கை ஈஸியா எடுத்துத்து போகலாம்!

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மேக்ஸ் பிக்அப் எச்டி 1.9 சிஎன்ஜி வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் ரூ11.19 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இதில் ஓரு முறை சிஎன்ஜியை நிரப்பினால் 400 கி.மீ வரை பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவ்வளவு சிறிய வயதில் எலக்ட்ரிக் பைக் கம்பெனி ஓனராக இளைஞர்!!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), பெங்களூருவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூருவில் பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் அல்ட்ராவொய்லெட் நிறுவனமும் ஒன்றாகும். இந்தியாவிலேயே விலையுயர்ந்த முதல் சூப்பர் எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய நிறுவனம், அல்ட்ராவொய்லெட் ஆகும். எஃப்77 (F77) என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட அந்த சூப்பர் எலக்ட்ரிக் பைக்கில் அதன்பின் பல்வேறு வெர்சன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும், எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை தாண்டி அல்ட்ராவொய்லெட் வேறு எந்த வாகனத்தையும் அறிமுகம் செய்யாமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக் ஒன்றையும் அறிமுகம் செய்தது.
Advertisement

டூவீலர் ஓனர்களின் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு!

இந்தியாவில் வாகன உரிமையாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை டோல்கேட் கட்டணம் (Toll Fees). கார், லாரி மற்றும் பஸ் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு, அதிகமான டோல்கேட் கட்டணம் மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. ஆனால் டூவீலர்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த பிரச்னை இல்லை.

எமன் லீவில் போய்ட்டார் போல, கொஞ்சம் தான் மிஸ் - வீடியோ!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று ஹெரியர் (Harrier) ஆகும். 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட விலைமிக்க டாடா காராக இருப்பினும், அதற்கு இணையாக மிகவும் பாதுகாப்பானது டாடா ஹெரியர் கார் ஆகும். குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Global NCAP Crash Test) மட்டுமின்றி, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும் 5க்கு முழு 5 நட்சத்திர ரேட்டிங்கை டாடா ஹெரியர் பெற்றுள்ளது. அதனால்தான், இங்கு ஒருவர் டாடா ஹெரியர் காரை ஓட்டி தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

இனி ஒரு பய லஞ்சம் குடுத்து எஸ்கேப் ஆக முடியாது!

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் டிராஃபிக் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை சரிய செய்ய இந்தியாவில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி முதன் முறையாக அட்வான்ஸ்டு டிராஃபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை டில்லியில் உள்ள ஒரு சாலையில் பொருத்தியுள்ளனர். இது எந்த அளுவிற்கு செயல்படும். இதனால் டிராஃபிக் பிரச்சனை எப்படி குறையும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒன்னே கால் கோடி ரூபா கார்ல போறது அவங்களா!

இந்தியாவில் ஒரு சில நடிகைகள், பல மொழி திரைப்படங்களிலும், நடித்து வருகின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் இஷா கோபிகர் (Isha Koppikar). இவர் தமிழ், கன்னடா, தெலுங்கு, மராத்தி மற்றும் ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து கொண்டுள்ளார். எனவே இந்தியா முழுக்க இஷா கோபிகருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
Advertisement

டாடா கார்கள் பாதுகாப்பு ரகசியம் இது தான்!

இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்கள் இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ரேட்டிங்கை பெற பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சோதனையில் நல்ல ரிசல்டை பெறும் கார்கள் இந்திய கண்டிஷன்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பெறுவதால் இந்த காருக்கான விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் டாடா கார்கள் சிறப்பான ரேட்டிங்கை பெற்றுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.