வெறும் நாலே முக்கா லட்சத்துக்கு புது காரா!
ஆட்டோமொபைல்
- 1 year, 4 month, 2 days ago
கார் என்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் அது தற்போது அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை சார்ந்து இருக்காமல், சுதந்திரமாக பயணம் மேற்கொள்வதை சொந்த கார்கள் உறுதி செய்கின்றன. ஆனால் இந்தியாவின் மிடில்-க்ளாஸ் மக்கள் பலரால், இன்னமும் சொந்த கார் கனவை நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. கார்கள் விலை உயர்ந்தவை என்பதுதான் இதற்கு காரணம். ஒருவேளை சிறுக சிறுக சேமித்து கார்களை வாங்கி விட்டாலும் கூட, அவற்றின் பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால், மிடில்-க்ளாஸ் குடும்பங்கள் தடுமாறும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.