ஹீரோவின் இந்த ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும்?

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து வரும் 110 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்று டெஸ்டினி 110. ஹோண்டா ஆக்டிவா 110, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 110 ஆகிய மற்ற 110 சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டர்.

எல்லாரும் வாங்கக்கூடிய மலிவான விலையில் புதிய ஹண்டர் 350 பைக்

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் ஹண்டர் 350 (Hunter 350) மோட்டார்சைக்கிளில் புதியதாக விலை குறைவான 'பிரீமியம்' (Premium) என்கிற வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹண்டர் 350 பைக்கின் ஏற்கனவே உள்ள எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான ரெட்ரோ (Retro) மற்றும் மிட் வேரியண்ட்டான மெட்ரோ (Metro)-க்கு மத்தியில் புதிய பிரீமியம் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கார் கம்பெனிகளை அடித்து ஓட விட்ட டாடா & மஹிந்திரா

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை கடந்த சில வருடங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த பிப்ரவரி மாதத்தில் 14 ஆயிரத்து 712 எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதற்கடுத்த கடந்த மார்ச் மாதத்தில் 22 ஆயிரத்து 315 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, அந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தவற்றை காட்டிலும் பாதிக்கு மேல் கூடுதலாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யமஹா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விலை உயர்த்தப்பட்டது

யமஹா நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ரேZR 125, ஃபேஸினோ 125 மற்றும் ஏராக்ஸ் 155 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது யமஹா. இதில் ரேZR மற்றும் ஏராக்ஸ் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. ஃபேஸினோ மாடலினை விரைவில் யமஹா அப்டேட் செய்யவிருப்பதால் தற்போது விலையை உயர்த்தவில்லை எனத் தெரிகிறது.
Advertisement

டாடா புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை விரைவில் வெளியிடுகிறது

கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த ஹேரியர் இவி (Harrier.ev) மாடலை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அதன் ட்வின்னான சஃபாரி இவி மாடலை விரைவில் டாடா மோட்டார்ஸ் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்திராவின் XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்குப் போட்டியாக சஃபாரி இவி மாடலை டாடா உருவாக்கி வருகிறது.

அடிமாட்டு விலையில் புது பைக்கை களமிறக்கிய ராயல் என்பீல்டு...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளிலேயே மிகவும் விலை குறைவானது (Most Affordable Royal Enfield Bike) என்ற பெருமையை ஹண்டர் 350 (Hunter 350) தன்வசம் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (Variant) விலை வெறும் 1,37,640 ரூபாயாக மட்டுமே உள்ளது.

தமிழ்நாட்டு கம்பெனியா ஒவ்வொருத்தரையும் பெருமைபட வைக்கும் TVS

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் நடந்து முடிந்த 2026 மார்ச் மாதத்தில் சுமார் 5.19 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மார்ச் மாதத்தை காட்டிலும் சுமார் 1 லட்சம் யூனிட்களுக்கும் அதிகம் என சொன்னால் நம்ப முடிகிறதா? டிவிஎஸ் நிறுவனத்தில் அப்படி எந்த மாதிரியான வாகனங்கள் அதிகமாக விற்பனையாகுகின்றன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ட்ரையம்ப் 350 சிசி இன்ஜின் பைக் பெர்ஃபாமன்ஸ் என்னனு தெரியுமா

350 சிசி இன்ஜின் கொண்ட புதிய ட்ரையம்ப் (Triumph) பைக்குகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. கடந்தாண்டு புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியது மத்திய அரசு. அதில் 350 சிசி அல்லது அதற்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரியை 28%-தத்தில் இருந்து 18% ஆகக் குறைத்தது. அதேபோல் 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரி 40% ஆக உயர்த்தப்பட்டது.
Advertisement

உப்பு தண்ணீரை வைத்து காரை கழுவினால் இவ்வளவு பிரச்சனை வருமா?

தண்ணீரை வைத்து காரை கழுவினால் காரின் மதிப்பு குறைந்துவிடும் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உப்பு தண்ணீருக்கும் காரின் மதிப்பிற்கும் இடையே மிகப்பெரிய அளவுக்கு ஒரு சம்பந்தம் இருக்கிறது. பலருக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. பலர் இன்றும் உப்பு தண்ணீரிலேயே காரை கழுவி வருகின்றனர். ஏன் உப்பு தண்ணீரில் காரை கழுவ கூடாது என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.

நல்லா கார் ஓட்டுறவங்களுக்கே இந்த விஷயம் தெரியாது!

மேனுவல் கார் ஓட்டும் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கிளட்ச் தான். கார் ஓட்டும் பலருக்கு எந்த நேரத்தில் எல்லாம் கிளட்சை அழுத்த வேண்டும் எந்த நேரத்தில் எல்லாம் கிளட்சை அழுத்த வேண்டாம் என்ற புரிதல் இல்லை. சிலர் காரின் ஆக்சிலேட்டரை விட்ட உடனேயே கிளட்ச் அழுத்தி விடுகின்றனர். இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது இது பற்றியது தான் இந்த பதிவு.

புதிய 350சிசி பல்சர் பைக் வாங்குவதை விட இதுதான் பெஸ்ட்!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் விலையுயர்ந்த பல்சர் (Pulsar) பைக்கான பல்சர் என்.எஸ்400இசட் (Pulsar NS400Z)-ஐ 400சிசி என்ஜினுக்கு மாற்றாக 350சிசி என்ஜின் உடன் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி (GST) சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக, மற்ற பைக் நிறுவனங்களை போன்று பஜாஜ் நிறுவனமும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது. இருப்பினும், புதிய 350சிசி பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் விலையை நிர்ணயிப்பதில் ஓர் சுவாரஸ்யமான விஷயம் நடைபெற உள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

பெட்ரோல் கிடைக்காதோ என்ற அச்சத்தில் பெங்களூரில்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் (Bangalore), எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாகவும் மாறி கொண்டுள்ளது. அந்த அளவிற்கு அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
Advertisement

எம்ஜியின் புதிய எஸ்யூவி ஏப்ரல் 20ல் வெளியாகிறது

சாலைகளில் செல்லும் போது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரைப் பார்த்தாலே ஒரு சின்ன பயம் வரும். அந்தளவிற்கான ரோடு பிரசன்ஸை அந்தக் கார் கொண்டிருக்கும். அதற்குப் போட்டியாக புதிய ஃபுல் சைஸ் எஸ்யூவி ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது எம்ஜி மோட்டார். அது வேறெதுவும் இல்லை, மெஜஸ்டர் (Majestor) தான்.

ஹோண்டா கார் விற்பனை மார்ச் 2026-ல் உயர்வு!

ஹோண்டா கார் விற்பனை மார்ச் 2026-ல் 5% வளர்ச்சி கண்டுள்ளது, புதிய மின்சார வாகனங்கள் வரவுள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகம். Honda Cars India records 5% sales growth in March 2026 with new EV plans.

அதிக ஸ்டோரேஜ் கொண்ட டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

பிராக்டிகாலிட்டி அம்சங்களிலேயே பைக்குகளில் இருந்து ஸ்கூட்டர்கள் பெருமளவில் வேறுபடுகின்றன. பைக்குளின் பெர்ஃபாமன்ஸ் பெரும்பாலும் ஸ்கூட்டர்களில் இருப்பதில்லை. ஆனால், அதற்கு ஈடு செய்யும் வகையில் நிறைய பிராக்டிகாலிட்டி அம்சங்களை ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கும். நகரங்களில் தினசரிப் பயன்பாட்டிற்கு சிறந்த வாகனங்கள் ஸ்கூட்டர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் 2-வீலர்களை விற்ற ஹீரோ!

உலகின் மிகப்பெரும் மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), கடந்த 2026 மார்ச்சில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு இதே மாதத்தில் 5,49,604 யூனிட்களாக ஹீரோ மோட்டோகார்பின் 2-வீலர்கள் விற்பனை இருந்த நிலையில், இந்த ஆண்டு 5,98,198 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Advertisement

மாருதி சிறிய ரக கார்கள் விரைவில் விலை உயரும் எனத் தகவல்

சர்வதேச பிரச்சினைகளினால் ஆட்டோமொபைல் துறையே அழுத்தத்தைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் கார்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி இதுவரை அந்த மாதிரி விலை உயர்வுகள் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் மாருதியும் சிறிய கார்களின் விலைகளை உயர்த்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாருதியை கதிகலங்க வைத்த ஜெர்மன் நிறுவன கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இந்திய சாலைகளில் சமீப காலமாக சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி (Launch Date) தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுஸுகி ஆக்ஸஸை விட எந்த விதத்திலும் சளைத்தது இல்ல!

2026 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 (Suzuki Burgman Street 125) ஆனது ஏற்கனவே விற்பனையில் உள்ள சுஸுகி ஆக்ஸஸ் 125 (Access 125) ஸ்கூட்டரின் மேம்பட்ட பிரீமியம் மேக்ஸி-ஸ்டைல் ஸ்கூட்டராக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது ஆக்ஸஸை விட அதிக அம்சங்களுடன், மேம்பட்ட பயண அனுபவத்தையும் சற்று அதிக விலையில் வழங்குகிறது.

வெறும் 4 காரை வெச்சிக்கிட்டு ஹோண்டா நிலைமை இப்படி ஆகிடுச்சே!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 585 கார்களை விற்பனை செய்துள்ளது. மற்ற கார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாக இருந்தாலும், வெறும் 4 கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து, ஒரே மாதத்தில் இத்தனை யூனிட் கார்களை விற்று இருப்பது பாராட்டத்தக்கதே. இருப்பினும், ஹோண்டாவின் 7,585 கார்கள் விற்பனை என்பது வழக்கத்தை காட்டிலும் அதிகமா அல்லது குறைவா என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

டாடா மோட்டார்ஸ்-க்கு சரியான போட்டினா அது மஹிந்திரா தான்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப மஹிந்திராவின் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் கார்களுக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், அறிமுகம் செய்யப்பட்டு 1.5 வருடங்களில் மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்களின் விற்பனை 50 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டேய் பரமா நீயுமாடா...

2026-27 நிதியாண்டு கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கியது. பொதுவாக புதிய நிதியாண்டு தொடங்கும்போது, கார்களின் விலை உயர்த்தப்படுவது வழக்கம். இதன்படி நடப்பு 2026-27 நிதியாண்டு தொடங்கிய உடனேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) ஆகிய நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்தி விட்டன.

ஒரே மாதத்தில் 1 லட்சம் பைக்குகளை விற்ற சென்னை பைக் கம்பெனி!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், கடந்த 2026 மார்ச் மாதத்தில் சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025-26 நிதியாண்டை ஒரு சாதனை ஆண்டாக நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, அதன் 350சிசி பைக்குகளுக்கான வலுவான சந்தைத் தேவையால், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

உலகையே மிரள விட்ட அம்பாஸிடரின் வாரிசு... 34 கிமீ மைலேஜ்....

இந்தியாவில் செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க இதுதான் நிலைமை. செடான் ரக கார்களுக்கு பதிலாக தற்போது எஸ்யூவி ரக கார்கள் (SUV Cars) சந்தையை ஆக்கிரமித்து விட்டன.
Advertisement

அமெரிக்காவுக்கே டஃப் குடுக்கும் தமிழ்நாட்டு நிறுவனம்!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் தலைநகரமாக தமிழ்நாடு (Tamil Nadu) இருந்து வருகிறது. ஏனெனில் உலகின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலையை அமைத்துள்ளன. இந்த வரிசையில் வியட்நாம் நாட்டை வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனமும் சமீபத்தில் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை அமைத்தது.