சென்னை RE பைக்குகளை இனி இந்த நாட்டிற்கும் அனுப்பனுமா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மேலும், துவக்கத்திலேயே மூன்று புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலக அரங்கில் ராயல் என்ஃபீல்டின் நெட்வொர்க் வலுபெற்று இருப்பதுடன், இந்தியாவின் பொறியியல் நிபுணத்துவம் மற்ற வெளிநாடுகளுக்கும் வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்வு குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹோண்டாவிற்கு போட்டியாக புதிய பைக்கை வெளியிட்ட ஹீரோ

இந்தியாவில் ஸ்ப்ளெண்டர் பைக்கின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையைப் பற்றி நாங்கள் தனியாகக் கூறத் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ஸ்ப்ளெண்டர் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்த எண்களே அதனைக் கூறி விடும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிராண்டு என்பதால், ஸ்ப்ளெண்டர் பெயரில் புதிய பைக்குகளை வெளியிடுவதில் ஹீரோ கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறது.

காரில் பேட்டரி சீக்கிரம் டவுன் ஆகாமல் பாதுகாப்பது எப்படி?

Car battery maintenance tips. காரின் பேட்டரி ஆயுளை அதிகரிக்கவும், அடிக்கடி சார்ஜ் இறங்குவதைத் தவிர்க்கவும் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் இங்கே உள்ளன.

கேடிஎம் பைக் வாங்கும் ஆசையை குழி தோண்டி புதைச்சுருங்க...!!

கேடிஎம் நிறுவனம் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் அதன் பைக்குகளின் விலைகளை இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் கேடிஎம் விற்பனை செய்யும் எண்ட்ரி-லெவல் 160சிசி பைக்குகளில் இருந்து விலையுயர்ந்த 390சிசி பைக்குகள் வரையில் அனைத்தின் விலைகளும் உயர்த்தப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

புதிய முதலமைச்சருக்கு சொந்தமாக ஒரேயொரு டொயோட்டா கார்!

கர்நாடக அரசியலில் புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த கர்நாடகாவை சேர்ந்த சித்தராமையா தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது கர்நாடாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய அரசியல் சூழலில் கவனத்தை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து வருகிற மே 30ஆம் தேதி சனிக்கிழமை டிகே சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முதல் எத்தனால் பைக், ஹீரோ கம்பெனியில் இருந்து!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெட்ரோல் இல்லாமல் எத்தனாலில் இயங்கக்கூடிய தனது முதல் மோட்டார்சைக்கிளை வருகிற ஜூன் 3ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் முன்னிலையில் நடைபெறவுள்ள அறிமுக நிகழ்ச்சியில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் இந்த புதிய ஹீரோ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதிக மைலேஜ் கொடுக்கும் இந்த பஜாஜ் பைக்கை வாங்கலாமா

ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு மாற்றாக வேறு ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் பஜாஜின் பிளாட்டினா (Bajaj Platina) பைக்கை முயற்சி செய்யலாம். ஸ்ப்ளெண்டரைப் போலவே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பைக் மாடலாகவே பிளாட்டினாவும் இருந்து வருகிறது. இந்த கம்யூட்டர் பைக்கின் சிறப்பம்கள் மற்றும் விலை ஆகிய தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

ஐரோப்பாவிற்குச் செல்லும் இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்ட கார்

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு கார் மாடல் ஸ்கோடா கைலாக். ஐரோப்பாவில் தற்போது சீன கார் தயாரிப்பு நிறுவனங்களினால் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறது ஸ்கோடா. குறைவான விலையில் சிறப்பான ஒரு காரை அங்கே உடனடியாக வெளியிட வேண்டும் என திட்டமிட, கைலாக்கை அந்நிறுவனம் டிக் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement

வின்ஃபாஸ்ட் VF8: இந்தியாவிற்கு வரும் புதிய மின்சார எஸ்யூவி!

வியட்நாமிய பிராண்டான VinFast நிறுவனம் தனது VinFast VF8 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் காப்புரிமை பெற்றுள்ளது. Discover the VinFast VF8 Electric SUV's India launch, features, and expected price. Get ready for a powerful EV!

பிரிட்டீஷ்காரங்களை விட பயங்கர மூளை!

இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் என்ற பெருமைய மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிக நீண்ட காலமாக தன்கைவசம் வைத்துள்ளது. இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஆனால் சர்வீஸ்தான் (Service) மிகவும் முக்கியமான காரணம் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் காரை வாங்கும் யாரிடமாவது பேசி பாருங்கள்.

இந்தியாவில் வெளியானது புதிய பெரிய புல்லட் பைக்

ஒருவழியாக நாம் எதிர்பார்த்து வந்த புல்லட் 650 பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. கடந்தாண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற EICMA நிகழ்வில் முதல் முறையாக புல்லட் 650 பைக்கை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். தொடர்ந்து அந்த மாதமே கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்வில் வைத்து இந்தியாவிலும் அறிமுகப்படுத்திவிட்டது. ராயல் என்ஃபீல்டின் ஏழாவது 650 சிசி பைக்காக அறிமுகமானது இந்த புல்லட் 650.

புதிய டாடா டியாகோ காரை எந்த வேரியண்ட்டில் வாங்குவது?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் மே 28ஆம் தேதியான இன்று அதிகாரப்பூர்வமாக விலைகள் அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களாக விற்பனையில் இருக்கும் டியாகோ கார் கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டது. அதன்பின் தற்போதுதான் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றுள்ளது.
Advertisement

மழைக்காலத்திற்கு முன் பைக் டயரை எப்படி பரிசோதிக்க வேண்டும்?

Bike tyre maintenance tips மழைக்காலத்திற்கு முன் உங்கள் பைக் டயர்களை முறையாகப் பரிசோதிப்பது எப்படி? தேய்மானம், காற்றழுத்தம் மற்றும் பாதுகாப்பு குறித்த முழுமையான வழிகாட்டி இதோ உங்களுக்காக.

டாடா, மஹிந்திராவை வேட்டையாட போகும் கொரிய நிறுவனம்!

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஹூண்டாய் நிறுவனத்தின் அந்த 2வது இடத்தை, இந்தியாவை சேர்ந்த டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகிய நிறுவனங்கள் பிடிக்க தொடங்கி விட்டன.

5 லட்ச ரூபாய் கூட இல்ல... ரூ.4.69 லட்சத்தில் புதிய டாடா கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.4.69 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

மலிவு விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட டாடா

வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த மேம்படுத்தப்பட்ட டாடா டியாகோ EV ஃபேஸ்லிப்ட் மாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இந்த டியாகோ EV விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் காரை பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் டிசைனுடன் டாடா மேம்படுத்தியிருக்கும் நிலையில், மிகவும் குறைவான விலையிலும் வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் குறித்த தகவல்களை முழுமையாக இங்கே நாம் பார்க்கலாம்.
Advertisement

கார் ரேடியேட்டரை பராமரிப்பது ஏன் அவ்வளவு முக்கியமானது?

Importance of Your Car Radiator | கார் ரேடியேட்டரின் செயல்பாடுகள் பற்றிய ஆழமான ஆய்வு. அதன் செயல்பாடுகள், முக்கியத்துவம், சாத்தியமான சிக்கல்களின் அறிகுறிகள் மற்றும் உகந்த கார் செயல்திறனுக்கான வழக்கமான பராமரிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள்.

காரின் லிம்ப் மோடை பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்!!

Limp Mode in Modern Cars: A Safety Feature for Indian Car Owners | உங்கள் காரில் உள்ள 'லிம்ப் மோட்' அம்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இது முக்கியமான வாகன உதிரிபாகங்கள் செயலிழக்கும்போது பாதுகாப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது. இது ஏன் நிகழ்கிறது, அதை எவ்வாறு கண்டறிவது மற்றும் சாத்தியமான தீர்வுகளை அறிக.

இந்தியாவில் வெளியாகும் புதிய ப்ரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் தற்போது வரை எரிபொருள் இருசக்கர வாகனங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது கீவே (Keeway) என்ற சீனாவைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். ஆனால் விரைவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களிலும் அந்நிறுவனம் கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக எந்த மாடலை அந்நிறுவனம் வெளியிடலாம் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

சீப்பான விலையில் கிடைக்கும் 3 எலெக்ட்ரிக் கார்கள்...!

பெட்ரோல் விலை இந்தியாவின் நிறைய மாநிலங்களில் ரூ.100-ஐ தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் கார்களே வேண்டாம் என நிறைய பேர் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக, சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்களின் மனநிலை எலெக்ட்ரிக் கார்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அத்தகையவர்களுக்காக, இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் அளவில் சிறியதான எலெக்ட்ரிக் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

அல்ட்ராவைலட் டெஸராக்ட் அறிமுகமாவதில் தாமதம் ஏன்?

Ultraviolette Tesseract மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் ஜனவரி 2027 வரை தாமதமாகியுள்ளது. Discover why the Ultraviolette Tesseract launch is pushed to 2027 and what advanced features this refined electric scooter will offer.

காரை சர்வீஸ் செய்வதில் புதிய வரலாறு படைத்த மாருதி சுஸூகி

இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் விதவிதமாக கார்களை வெளியிட்டாலும், நிறைய வாடிக்கையாளர்கள், குறிப்பாக முதல் முறை கார் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மாருதி கார்களையே தேர்ந்தெடுப்பதற்கு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் சிறப்பான சர்வீஸ் அனுபவம். இந்த நிலையில் விற்பனையில் மட்டுமின்றி கார்களுக்கு விற்பனைக்குப் பின்னான சர்வீஸ் வழங்குவதிலும் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மாருதி சுஸூகி.

காரின் மைலேஜ் திடீரென குறைந்தால் முதலில் என்னென்ன செக் செய்ய வேண்டும்?

Car mileage drop, fuel efficiency tips. உங்கள் காரின் மைலேஜ் திடீரென குறைந்தால் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி இங்கே விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கம் இனி ஒருத்தரும் போக போறது இல்ல!

JSW எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் மெஜஸ்டர் காரின் விலைகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.40.99 லட்சத்தில் இருந்து இந்த காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே, இதற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ரூ.34.76 லட்சத்தில் இருந்தே கிடைக்கிறது. இதனால், புதிய மெஜஸ்டர் கார் உடன் ஃபார்ச்சூனரின் டாப் வேரியண்ட்டை தான் ஒப்பிட வேண்டும். ஃபார்ச்சூனரின் டாப் வேரியண்ட்டாக 'நியோ டிரைவ்' ரூ.44.72 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement

வீடியோவால் சிக்கிய 32 வயது வாகன ஓட்டி... வீடியோ வைரல்!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் உரிமையாளர் ஒருவர் ஹைவேயில் தனது காரில் மணிக்கு 200கிமீ வேகத்தில் சென்றதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிக்கியது எப்படி? இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் அதிகப்பட்சமாக எவ்வளவு வேகத்தில் செல்லலாம்? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.