கார் கதவுல கீழ் பகுதியில் மட்டும் துரு பிடிக்கிறதா?

நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களில் கதவின் கீழ் பகுதியில் மட்டும் துருப்பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். இப்படியாக மற்ற பகுதியில் எல்லாம் துருப்பிடிக்காமல் கதவின் கீழ் பகுதியில் மட்டும் துருப்பிடிப்பதற்கான காரணம் என்ன? இதுவும் குறிப்பாக பழைய கார்களில் மட்டும் இப்படியான பிரச்சினைகள் ஏன் ஏற்படுகிறது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார்கள் விற்பதில் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து தாக்கிய டாடா

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் (Tata Motors Passenger Vehicles) நிறுவனம் 2026 ஜனவரியில் உள்நாட்டு விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2026 ஜனவரி மாதத்தில் மொத்தம் சுமார் 70,222 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டு, 2025 ஜனவரியின் 48,075 டாடா கார்கள் விற்பனை உடன் ஒப்பிடுகையில் 46.07% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மாருதி எர்டிகாவை விட ரூ.3 லட்சம் குறைவான விலையில் 7 சீட்டர்!

இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எம்பிவி ரக கார் எது? என கேட்டால், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) என பச்சை குழந்தை கூட சரியாக கூறி விடும். நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும், இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையான எம்பிவி கார் என்ற பெருமையை, மாருதி சுஸுகி எர்டிகா தக்க வைத்து கொண்டுள்ளது.

மேட்-இன்-இந்தியா லாரிகளுக்கு வெளிநாட்டில் கிடைக்கும் மரியாதை

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (Tata Motors Limited) தனது துணை நிறுவனமான பி.டி டாடா மோட்டார்ஸ் டிஸ்ட்ரிபூசி இந்தோனேசியா (PT Tata Motors Distribusi Indonesia) வாயிலாக, இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத மிக அதிக எண்ணிக்கையிலான வணிக வாகனங்களுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்தோனேசியா நாட்டின் விவசாய நடவடிக்கைகளையும் கிராமப்புற ஏற்றுமதி, இறக்குமதிகளையும் மேம்படுத்த 70,000 வாகனங்களை டெலிவிரி செய்ய இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
Advertisement

வீட்டுக்கு 4 டூவீலர் நிக்கும் போல!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 18,52,870 டூவீலர்கள் விற்பனையாகியுள்ளது. இதில் ஹோண்டா நிறுவனம் தான் 20.82 சதவீத வளர்ச்சியுடன் மிகப்பெரிய அளவில் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுளு்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த முறை கேடிஎம் புதுசா என்ன அறிமுகப்படுத்தி இருக்கு?

2026 கேடிஎம் டியூக் 200 (KTM Duke 200) மோட்டார்சைக்கிள், மேம்பட்ட செயல்திறன், சிறந்த கையாளுதல் மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில், புதிய வண்ணங்கள், திருத்தப்பட்ட பாகங்கள் மற்றும் சில இயந்திர மேம்பாடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளீட்டு நிலை செயல்திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் பிரிவில், அதன் போட்டித்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்துவதில் கேடிஎம் கவனம் செலுத்தியுள்ளது.

திடீரென இந்த பைக்கின் விலையை குறைத்த நிறுவனம்!

அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் தனது ஆர்எஸ் 457 மற்றும் டியூனோ 457 ஆகிய பைக்குகளின் எம்ஒய் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த பைக்குகளின் விலையையும் குறைத்துள்ளது. இவ்வளவு விலை குறைந்துள்ளது? புதிய வெர்ஷனில் என்னென்ன மாற்றங்கள் உள்ளது? விரிவான விபரங்களை காணாலம் வாருங்கள்.

இந்தியாவில் விற்பனையான டாப் 10 காம்பேக்ட் எஸ்யூவி இதுதான்!

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தகார்கள் குடும்பத்துடன் பயணிக்க ஏற்றகார்களாக உள்ளன. இதனால் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. கடந்தஜனவரி மாதம் இந்த காரை எத்தனை பேர் வாங்கினார்கள் என்ற விரிவான விபரங்களையும், டாப் 10 காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலையும் காணலாம் வாருங்கள்.
Advertisement

இவர்கிட்ட இந்த லேண்ட் ரோவர் கார் எல்லாம் கூட இருக்கா!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2026 பிப்ரவரி 9 அன்று, ஒரு பழமையான 1958 மாடல் லேண்ட் ரோவர் சீரிஸ் I வாகனத்துடன் காட்சி தந்தது, அவரது தனிப்பட்ட வாகன ஆர்வத்திற்கும் மாநிலத்தின் வரலாற்று சிறப்புமிக்க தொழில் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான பாலமாக அமைந்தது. டாடா குழுமத்தின் புதிய ஆலையில் லேட்டஸ்ட் லேண்ட் ரோவர் எவோக் காரை ஓட்டி பார்த்த முதல்வர், பழைய லேண்ட் ரோவர் சீரிஸ்-1 கார் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் காரின் கதவு மற்றும் ஜன்னல் சீல் ஆயுளை நீடிப்பது எப்படி?

Car's Window and Door Seals Maintenance | உங்கள் காரின் ஜன்னல் மற்றும் கதவு முத்திரைகளின் ஆயுளை நீட்டிக்க, தண்ணீர் சேதம், சத்தம் மற்றும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக அவற்றைப் பாதுகாத்து, ஒரு மென்மையான ஓட்டுநர் அனுபவத்திற்கு உங்களின் விரிவான வழிகாட்டி.

காரின் இதயத்தை பத்திரமா பார்த்துக்கோங்க...!!

எஞ்சின்தான் காரின் இதயம். இதயத்தை எவ்வளவு பயபத்திரமாக பார்த்துக்கொள்ள நினைக்கிறோமோ, அந்தளவுக்கு கார் எஞ்சினையும் பராமரிக்க வேண்டும். இதனால், எஞ்சின் ஆயுட்காலம் கூடுவதோடு, அதிக மைலேஜ் மற்றும் இதர பிரச்னைகளிலிருந்தும் விடுபட முடியும்.

புதிய இவி கார வேற லெவலில் உருவாக்கிய ஃபெராரி!

ஃபெராரி நிறுவனம் தனது முதல் இவி காரை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்நிறவனம் தனது காரின் உட்புற வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கார் குறித்துநமக்கு இதுவரை கிடைத்ததகவல் என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்தியாவின் நீளமான எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா - பஜாஜ் வேகோ!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்தியாவின் மின்சார மூன்று சக்கர வாகனச் சந்தையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில், தனது WEGO P9018 மின்சார மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல், ஒருமுறை சார்ஜ் செய்தால் 296 கி.மீ. தூரம் செல்லக்கூடிய சான்றளிக்கப்பட்ட வரம்புடன் வருகிறது. இது தவிர, 17.7 kWh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி தொகுப்புடன் இந்தியாவில் கிடைக்கும் மிகப்பெரிய மின்சார மூன்று சக்கர வாகனமாக இது திகழ்கிறது.

ஸ்கூட்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமானது இதுதான்

இந்தியாவில், உயரம் குறைவானவர்கள் பெரும்பாலும் உயரமான ஸ்கூட்டர்களை ஓட்டுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதுவே, தரையில் இருந்து குறைந்த உயரத்தில் ரைடர் இருக்கை கொண்ட ஸ்கூட்டர்கள் அத்தகையவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகர சாலைகளில் பயணிக்கும்போதும் சிறந்த சமநிலையையும், நம்பிக்கையையும் வழங்குகின்றன. டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ், டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட், ஹோண்டா டியோ, ஹோண்டா ஆக்டிவா 6ஜி, சுஸுகி ஆக்ஸஸ் 125 மற்றும் யமஹா ஃபேஸினோ போன்ற ஸ்கூட்டர்கள் எடை குறைந்ததாகவும், எளிதாக இயக்கக்கூடியதாகவும் உள்ளன.

ரஜினி காலத்தில் இருந்து சிகா காலம் வரையிலும் ஜாவா பைக்...!!

சாலைகளில் எங்கும் காணக் கிடைக்கும் சில பைக் பிராண்டுகள் உள்ளன. அவற்றைப் பற்றி யோசிக்காமல் நீங்கள் பரிந்துரைக்கலாம். ஆனால் ஜாவா (Jawa) அத்தகைய பிராண்ட் அல்ல. கடந்த காலத்திலும் சரி, இன்றும் சரி, ஜாவா என்பது 'நடைமுறை வழக்கத்தை' பின்பற்றாமல், தங்களுக்கான பாதையைத் தேர்வு செய்யும் தனித்துவமான பைக் ரைடர்களுக்கானது.

மஹிந்திரா ஸ்கார்பியோவை காராக வாங்குவதை விட இது பெஸ்ட்டு...!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பிரபலமான ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரின் கரடுமுரடான பிக்-அப் டிரக் (Pick-up Truck) வெர்சன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2023 ஆகஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவில் இதன் கான்செப்ட் (Concept) வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இதன் உற்பத்தி வடிவம் 2025இல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
Advertisement

அம்பானியாவே இருந்தாலும் வெயிட் பண்ணணும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷன் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் வரியில் இருந்து தப்பிக்க தான் இந்த ஐடியாவா...!

தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் டாடா குழுமம் (Tata Group) புதிய தொழிற்சாலையை திறந்திருப்பது தான் தற்சமயம் பேசும் பொருளாக உள்ளது. ஏனெனில், இந்த ஆலை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்தது மட்டுமின்றி, அங்கு அசெம்பிள் (Assemble) செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) காரையும் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஓட்டி பரவசப்படுத்தினர்.

5.85 லட்சம் கார்களை ரயில் மூலம் அனுப்பியதால் இவ்ளோ நன்மைகளா!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி (Maruti Suzuki) தன் வசம் வைத்துள்ளது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு டீலர்ஷிப்கள் உள்ளன. அங்கெல்லாம் கார்களை கொண்டு சென்று சேர்க்க பல்வேறு வழிகளை மாருதி சுஸுகி நிறுவனம் கையாள்கிறது.

வருஷத்துக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யலாம்!

இந்தியாவின் தொழில் நில வரைபடத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) பிராண்டை அதிகாரப்பூர்வமாக இணைத்து, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள புதிய உற்பத்தி ஆலையின் திறப்பு விழா, உலக அளவில் ஆடம்பர கார் தயாரிப்பில் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்துகிறது.
Advertisement

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் வட மாநிலங்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) பயன்பாடு வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. வழக்கமான டீசல் பஸ்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவே ஆகிறது. அத்துடன் டீசல் பஸ்களை போல், எலெக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது கிடையாது.

ஸ்கூட்டர் தானே என்று நிறைய பேர் இதை கவனிப்பது கிடையாது...

பைக்குகளின் எளிய வடிவமைப்பு தான் ஸ்கூட்டர்கள் ஆகும். நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் பயணிப்பதற்கு ஸ்கூட்டர்கள் மிகவும் ஏற்றவை ஆக விளங்குகின்றன. இதனாலேயே இந்தோனிஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பைக்குகளை காட்டிலும் ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை அதிகம் காண முடியும். இந்தியாவிலும், 2-வீலர் வாங்கும் இரண்டில் ஒருவர் ஸ்கூட்டரை தேர்வு செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த பல வருடங்களாக அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது.

வரி குறைப்பு: ஹார்லிக்கு சாதகம், என்ஃபீல்டுக்கு பாதகமா?

அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் இறக்குமதி வரியை நீக்குகிறது. இது ராயல் என்பீல்டு விற்பனையை எவ்வாறு பாதிக்கும் என்பதை இங்கே காணலாம்.

இதை கவனிக்கலேன்னா உசுரே போயிடும்!

உங்கள் வாகனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள, காற்றுப் பைகள் பராமரிப்பு குறித்த முக்கியமான குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள். உகந்த காற்றுப் பைகள் செயல்பாட்டிற்கு, வழக்கமான சரிபார்ப்பு மற்றும் பராமரிப்பு அவசியம்.
Advertisement

ரூ.15,000 கோடியில் மிகப்பெரிய ஆலையை அமைக்கிறது மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த வாகன மற்றும் டிராக்டர் தொழிற்சாலையை INR 15,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது.