ரூ.15,000 கோடியில் மிகப்பெரிய ஆலையை அமைக்கிறது மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த வாகன மற்றும் டிராக்டர் தொழிற்சாலையை INR 15,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது.

ஓலாவை கதறவிட எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஹீரோ கம்பெனி!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது மின்சார வாகனப் பிரிவான 'விvடா' (Vida) மூலம் வேகமாக வளர்ந்து வருகிறது. V1, V2 வரிசை மாடல்கள் மற்றும் மலிவு விலையிலான VX2 ஸ்கூட்டர் வரிசைக்குப் பிறகு, தற்போது குழந்தைகள் இலக்கான DIRT.E K3 மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தி, எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளது.

17 ஆயிர ரூபா கூடுதலா செலவு பண்ணா ஹண்டர் பைக் கிடைக்கும்!!

இந்த மோட்டார்சைக்கிள்களின் என்ஜின் திறன் மற்றும் அவற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது இந்த ஒப்பீடு வினோதமாகத் தோன்றலாம். இருப்பினும், நீங்கள் இந்த பைக்குகளில் ஒன்றை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இவை இரண்டும் எளிதில் அணுகக்கூடிய மோட்டார்சைக்கிள்கள், ஒத்த ஆற்றல் புள்ளிவிவரங்கள் மற்றும் கிட்டத்தட்ட ஒரே விலை வரம்பில் வருகின்றன.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் விபத்து அதிகம்

தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தினம் தோறும் விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் எண்ணிக்கையை குறித்த விபரங்களை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு தான் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் தமிழ்நாட்டில் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது டாடா!

இந்திய சந்தையில் கிடைத்து வரும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற, அதே நேரத்தில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வரும் பிப்ரவரி 20ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கார் கதவை எப்படி அடைக்கனும் தெரியுமா?

நீங்கள் வாகனங்களில் பயணிக்கும் போது காரின் கதவுகளை வேகமாக மூடினால் வாகனத்தின் உரிமையாளர் உங்கள் மீது கோபப்படக்கூடும். காரின் கதவுகளை மெதுவாக மூடும்படி உங்களிடம் கோபமாக கூற வாய்ப்புள்ளது. இப்படியான சம்பவம் நாம் அனைவருக்கும் நடந்திருக்கும். ஆனால் வாகனங்களின் கதவுகளை மெதுவாக மூடினால் சரியாக முடாது. இப்படியாக வாகனங்களின் கதவுகளை எப்படி சரியாக மூட வேண்டும் என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

கார் அடியில இப்படி தண்ணீர் சொட்டுச்சுன்னா இதை செக் பண்ணுங்க

கார் ஏசி கசிவுகளின் பொதுவான காரணங்கள் மற்றும் உங்கள் வாகனத்தின் காற்றுச்சீரமைப்பு அமைப்பை திறம்பட பராமரிப்பது எப்படி என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

7பேர் ஒரே குடும்பமா போகலாம்!

இந்தியாவில் எம்பிவி கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. வருங்காலங்களில் புதிதாக கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பலர் எம்பிவி கார்களை தான் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு நல்ல வளர்ச்சியை பெற்று வரும் நிலையில் கார்களை அதிகம் விரும்பத் துவங்கி விட்டனர். அதன்படி இந்தியாவில் விரைவில் வரவுள்ள எம்பிவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி மாருதி, ஹூண்டாய், நிஸான், பென்ஸ் மற்றும் சிட்ரோன் ஆகிய நிறுவனங்களையும் கார்கள் இந்த பட்டியலில் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இப்ப புக் பண்ணா 1 வருஷம் கழிச்சு தான் டெலிவரி

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தான் தனது எஸ்யூவி 700 காரை அப்டேட் செய்து எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்ற புதிய பெயரில் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

கிளட்ச் புடிக்க தேவையில்ல, பிரேக் கொடுத்தா மட்டும் போதும்!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்திற்குச் சொந்தமான ஆஸ்திரிய பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் (KTM), தனது பைக்குகளில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Automated Manual Transmission - AMT) கியர்பாக்ஸை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது மேனுவல் (Manual) கியர்பாக்ஸின் அம்சங்களுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் அம்சங்களை இணைக்கிறது.

வெறும் அன்ஜே முக்கா லட்சத்துக்கு 7 சீட்டர் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த நிஸான் க்ராவைட் கார், வரும் பிப்ரவரி 17ம் தேதி (February 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டோல்கேட் பாஸை இத்தனை லட்சம் பேர் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் சுங்கச்சாவடிகளை கடக்க தனிநபர் வாகனங்களுக்கு வருடம் என்ற பாஸ் முறை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது வரை அதை 50 லட்சம் பேர் வாங்கி விட்டதாக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது இதன் மூலம் பயணிகள் சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணத்தில் கடந்து செல்ல முடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

சென்னையில் மூடிய இந்த ஆலையை திறக்க போறாங்க!

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை தற்போது செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டுள்ள நிலையில் அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக திட்டமிட்டு வரும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் இந்த ஆலையில் தயாரிப்பது துவங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

34 கிமீ மைலேஜ்! ஆனா விலை முழுசா 5 லட்ச ரூபா கூட இல்ல!

இந்திய சந்தை கண்ட மிகச்சிறந்த ஹேட்ச்பேக் கார்களில் (Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). முதல் தலைமுறை வேகன் ஆர் கார் கடந்த 1993ம் ஆண்டே ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அதன் பின் 6 ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்த 1999ம் ஆண்டில்தான், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

பரபரப்பான சாலையில் காஸ்ட்லீ காருக்குள் இருந்தது அவரா!!

அம்பானி குடும்பம் ஆடம்பர வாகனங்கள் மீது கொண்ட ஈர்ப்பிற்கு புதிய சான்றாக, மெர்சிடிஸ் மேபேக் SL680 மோனோகிராம் சீரிஸ் ரக கார்களை இரண்டை வாங்கியுள்ளது. இந்தியாவில் இந்த அரிய வகை மாற்றக்கூடிய சொகுசு காரின் மூன்று யூனிட்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் இரண்டை அம்பானிகள் சொந்தமாக்கியுள்ளனர். இது அவர்களது ஆடம்பர குணம் மற்றும் அதீத வாகன ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

பாரத் பெட்ரோலியம் - கியா கூட்டணி!

இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக கியா (Kia) உள்ளது. தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.
Advertisement

சென்னைக்கு அருகே ரெனால்ட் டஸ்டர் கார்... இரவில் சோதனை ஓட்டம்

நீண்ட காத்திருப்புக்கு பிறகு, கார் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் ஜனவரி 26 அன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் போர்ச்சுகலில் டஸ்டரின் டச்சியா பதிப்பு உலகளவில் அறிமுகமானதிலிருந்தே இந்தியாவில் இது ஒரு முக்கிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. உலகளாவிய சந்தைக்கு ஒரு ரெனால்ட் பதிப்பும், இந்தியாவிற்கான ஒரு தனித்துவமான பதிப்பும் உள்ளது. சமீபத்தில், அறிமுகத்திற்கு முன்பாக, டஸ்டர் பொது சாலைகளில் எந்தவித மறைப்பும் இல்லாமல் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

இந்த 4 காருக்கு தான் நாடே வெயிட்டிங்!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு சிறப்பான விற்பனையை பெற்றது. பல்வேறு புதிய அறிமுகங்கள் கடந்த வருடம் நிகழ்ந்தன. இதன் காரணமாக நிறுவனம் ஹூண்டாக மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே அதிக வாகனங்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக உருவெடுத்தது. இது மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் விற்பனையில் இந்நிறுவனம் தான் மார்க்கெட்டில் அதிக எலெக்ட்ரிக் காரர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறி உள்ளது.

15 ஆயிரம் கோடியில் தொழிற்சாலை என்றால், எத்தனை பேருக்கு வேலை?

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா (Mahindra), மகாராஷ்டிராவில் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த கார் மற்றும் டிராக்டர் (Tractor) உற்பத்தி மையத்தை அமைக்க ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம், மஹிந்திராவின் உற்பத்தித் திறனைப் பன்மடங்கு பெருக்கும் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

5-சீட்டர் காரை வாங்குறதுக்கு பதிலா 7-சீட்டரை வாங்கலாம்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய ஃபோக்ஸ்வேகன் டைரான் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line) எஸ்யூவி கார் இந்த பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தற்போது விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் (Tiguan R-Line) எஸ்யூவி காரின், ஏழு இருக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
Advertisement

பாதுகாக்கறதுல குல தெய்வம்!

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

கடைசி காரையும் இந்தியாவில் டெலிவிரி செய்தது லம்போர்கினி!

ஆட்டோமொபிலி லம்போர்கினி இந்தியா (Automobili Lamborghini India) நிறுவனம் தனது கடைசி ஹுராகன் டெக்னிகா (Huracan Tecnica) காரை இந்தியாவில் புக் செய்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி (Delivery) செய்துள்ளது. இதன் மூலம், புகழ்பெற்ற வி10 என்ஜின் (V10 Engine) கொண்ட சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரான ஹுராகனின் சகாப்தம் இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ளது.

சிறிய கார்களின் ரேட் எக்குதப்பா ஏறப்போகுது!

இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாகனங்களின் மைலேஜ் குறித்து விரைவில் வரவுள்ள புதிய விதிமுறையில் சிறிய வாகனங்களுக்கான விதி விதிக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே இது பலனளிக்கும் என்பதால் இந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கோடி ரூபாயில் பரிசை பெற்று இருந்தாலும் இது மறக்க முடியாதது!!

உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட், இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் T20 லீக் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த மகத்தான வெற்றி மற்றும் சீசன் முழுவதும் அவர்களின் போராடும் உணர்வைப் பாராட்டி, கோப்பை வென்ற அனைத்து அணி வீராங்கனைகளுக்கும் புத்தம் புதிய சேத்தக் C25 ஸ்கூட்டர்களை பரிசாக வழங்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Advertisement

2-வீலரில் கொல்லிமலை போனவங்களுக்கு இந்த கஷ்டம் புரியும்!!

கொல்லிமலை (Kolli Hills), தென் இந்தியாவின் சவாலான மலைப்பாதைகளில் ஒன்று. 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில், கிரேவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) நிறுவனத்தின் ஆம்பியர் நெக்ஸஸ் (Ampere Nexus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஓட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.