சென்னையில் யமஹா எத்தனை பேரது வாழ்க்கையை மாற்றியிருக்கு!!

யமஹா (yamaha) நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை கொண்டிருப்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் 2015ஆம் ஆண்டில் 2-வீலர் உற்பத்தி தொழிற்சாலையை யமஹா நிறுவியது. இந்த வகையில் பார்த்தால், யமஹா நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலை நிறுவப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இதனை தற்போது யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் கொண்டாடி வருகிறது. மேலும், மற்றொரு சாதனைக்காகவும் சென்னை தொழிற்சாலையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி யமஹா கொண்டாடியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மனைவியின் பிறந்த நாளில் கணவர் வாங்கிக் கொடுத்த கார்!!

எத்தனை கார் & பைக்குகளை வாங்கி இருப்பினும், மனைவிக்காக புதியதாக கார் அல்லது பைக் வாங்வது என்றாலே எப்போதுமே அது ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும் பணக்காரர்கள் கூட தங்களது மனைவிக்கு விலையுயர்ந்த வாகனத்தை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளதை பார்த்திருக்கிறோம். பணக்காரர்களுக்கே அப்படியென்றால், ஓட்டல் நடத்திவரும் சாதாரணமான மிடில்-கிளாஸ் கணவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் நபர், மனைவியின் பிறந்த நாளுக்காக அவருக்கு பிராண்ட்-நியூ காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.

இந்த கார் மட்டும் வந்துச்சுன்னா எல்லாரும் காலி தான்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்டரிக் வாகன அணி வகுப்பை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக ஹாரியர் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருடன் சேர்த்து மொத்தம் 6 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் மற்றொரு எலெக்ட்ரிக் காராக டாடா சியாரா இவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பல ஆண்டுகளாக கான்செப்டில் இருக்கும்டாடா அவ்னியா காருக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்பீல்டுக்கு சங்கு ஊத போகும் விலை குறைவான பைக்!

இந்திய சந்தையில் அட்வென்ஜர் பைக்குகளுக்கான (Adventure Bikes) டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போது பைக்குகளில் தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. அது மட்டுமல்லாது, ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்ட கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
Advertisement

வேலியே பயிரை மேய்ந்த கதை... கியா தொழிற்சாலையில் திருட்டு!!

கியா (Kia), உலகளவில் பிரபலமான தென்கொரிய கார் நிறுவனம். இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் நுழைந்த கியா, குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் கியா நிறுவனம், இந்திய மார்க்கெட்டிற்குள் நுழையும்போதே ஆந்திராவில் கார் உற்பத்தி தொழிற்சாலை உடன் தான் நுழைந்தது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அனந்தபுரம் மாவட்டத்தில் சுமார் 536 ஏக்கர் பரப்பளவில் உள்ள கியா தொழிற்சாலையில் தற்போது பெரிய அளவிலான திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

இன்னும் அஞ்சே மாசம்தான்! பழைய வண்டிகளுக்கு ஆப்பு வைத்த அரசு!

இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையில் சிக்கி தடுமாறி கொண்டுள்ளன. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் பழைய வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. எனவே பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எலெக்ட்ரிக் கார்களின் விலை குறையப்போகுது!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை அதிகப்படுத்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியை 110 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இது அனைத்து விதமான நிறுவன கார்களுக்கும் கிடையாது. குறிப்பிட்ட விதிமுறையை பின்பற்றும் வாகன நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த இறக்குமதி விலையில் தள்ளுபடி பொருந்தும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பாகிஸ்தான் சாலைகளை பார்த்து இந்திய யூடியூபர் சொன்ன வார்த்தை!

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) பைக்கில் பாகிஸ்தானில் சாலை மார்க்கமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய யூடியூப்பர் (Youtuber)-ஐ பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், இந்த நபர் தேசிய புலனாய்வு குழுவினரால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வந்தவரை அதிரடியாக என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. என்ன நடந்தது? பாகிஸ்தான் சாலைகளில் இந்த இந்தியர் ஓட்டிய பிஎம்டபிள்யூ பைக் எத்தகையது என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ஹாரியர் இவி காரில் எத்தனை வேரியன்ட் இருக்குது தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் ஜூலை 2ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த காரின் வேரியன்ட் விபரங்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

70 நாளில் 10,000 கார்களை டெலிவரி செய்த மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களில் முக்கிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளுது. இந்நிறவனம் கடந்த 2 மாதங்களில் அதிக எண்ணிக்கையான வாடிக்கையார்களுக்கு இந்த காரை டெலிவரி செய்தது. இந்த காருக்கு ஏகப்பட்ட புக்கிங் குவிந்துள்ள நிலையில் முடிந்த அளவிற்க அதிக அளவிலான வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்து வருகிறது.இத குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த ஹூண்டாய் காரை இதுக்கு அப்புறமாவது யாராவது வாங்குவார்களா

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார், கிரெட்டா (creta) ஆகும். ஹூண்டாயில் இருந்து மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று, கிரெட்டா ஆகும். இதனாலேயே கிரெட்டாவின் 6/7-சீட்டர் வெர்சனாக ஹூண்டாய் அல்கஸார் (Alcazar) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மஹிந்திராவின் ஸ்கார்பியோ (Scorpio) மற்றும் எக்ஸ்யூவி700 (XUV700) கார்களின் ஆதிக்கத்தால், அல்கஸாரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் மஹிந்திரா கண்ட புதிய சாதனை!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹெரியர்.இவி எலக்ட்ரிக் கார் (Harrier.ev Electric Car) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த டாடா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் அதன் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது. இன்னும் சொல்லப்போனால், டாடா ஹெரியர்.இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே மேற்கூறப்பட்ட மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் 10 ஆயிரம் கார்கள் சாலைக்கு வந்துவிட்டன. இதனை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

இவ்ளோ கம்மியான விலையில் 130 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooters) ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதன் டெலிவரி பணிகள் 2024ம் ஆண்டு ஜூலை மாதம்தான் தொடங்கப்பட்டன.

ஹாரியர் இவி காரை வாங்கினால் 1 கி.மீக்கு ரூ4 மிச்சம் பண்ணலாம்

டாடா நிறுவனம் இன்று தனது ஹாரியர் இவி காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பல்வேறு நவீன அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு பெரும்பாலும் அதன் கம்பஷன் இன்ஜின் மாடல்களின் வடிவமைப்பு போல தான் இருக்கிறது. தற்போது ஹாரியர் காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் டீசல் இன்ஜின் காரை வாங்கலாமா அல்லது எலெக்ட்ரிக் காரை வாங்கலாமா என்ற குழுப்பத்தில் இருக்கின்றனர். இந்த கார்களில் எது பெஸ்ட் என்ற விரிவான விரபங்களையும் எது நல்ல லாபம் தரும் என்ற விபரங்களையும் இங்கே காணலாம்.

டாடாவை சுத்து போட்டு காலி செய்யும் மஹிந்திரா மற்றும் எம்ஜி!!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், எலக்ட்ரிக் கார்களும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சமீப காலமாக எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 மே மாதத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு இருந்தது? எந்த நிறுவனங்கள் அதிக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

ஐபிஎல் மைதானத்தில் நிறுத்தப்பட்ட கர்வ் காரை யார் வெல்ல போவது

ஐபிஎல் 2025 (IPL 2025) கிரிக்கெட் தொடர் ஜூன் 3ஆம் தேதியான இன்றோடு நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் 22ஆம் தேதி வழக்கம்போல் கோலாகலமாக துவங்கிய 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இடையில் போர் பதற்ற சூழலினால் 1 வார கால தாமதத்திற்கு பிறகு இன்று நிறைவடைய உள்ளது. உலகளவில் பிரபலமான இந்த டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஒரு ஆட்டம் மட்டுமே இன்னும் மீதம் உள்ளது. அதுதான், இறுதிப்போட்டி ஆகும். இதுவரையில் ஐபிஎல் கோப்பையை வெல்லாத இரு அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Advertisement

பட்டன தட்டுனா தானா பார்க் ஆகும் காரின் விலை இவ்வளவு தானா?

டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த கார் ரூ21.49லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் பல்வேறு அட்வாஸ்டு அம்சங்களுடன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டூவீலர் விலையில் இந்த கார்கள் விற்பனைக்கு வரப்போகுது?

இந்தியாவில் என்ட்ரி லெவல் கார்களை மிக குறைவான விலையில் விற்பனை செய்ய சாத்தியம் இருப்பதாக மாருதி நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதுபடி பாரத்தால் இந்தியாவில் டூவீலர் விலையில் ஒரு காரை விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். சிறிய ரக கார்களுக்கு இந்தியா பெரிய மார்கெட்டாக இருந்து தற்பேது மாறி வருகிறது. இந்நிலையில் மீண்டும் சிறிய ரக கார்கள் இந்திய மார்கெட்டில் ஆதிக்கம் செலுத்துமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா காரை வாங்குவதற்கு இதைவிட பெரிய காரணம் என்ன வேண்டும்

டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று ஃபார்ச்சூனர் (Fortuner) ஆகும். சற்று விலைமிக்க காராக இருப்பினும், ஃபார்ச்சூனரை வாங்குவதற்கும் நம் நாட்டில் நிறைய பேர் தயாராக உள்ளனர். இதனாலேயே அவ்வப்போது ஃபார்ச்சூனரை மறக்காமல் அப்டேட் செய்துவிடும் டொயோட்டா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது ஃபார்ச்சூனரின் மைல்ட் ஹைப்ரீட் (Mild Hybrid) வெர்சனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சில டொயோட்டா மைல்ட் ஹைப்ரீட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது ஃபார்ச்சூனர் மைல்ட் ஹைப்ரீட் கார் இணைந்துள்ளது.

30 நாளில் 4.65 லட்சம் வாகனங்கள் வித்துடுச்சு!

ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர் தற்போது மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. உள்ளூர் விற்பனையிலும் சரி ஏற்றுமதியிலும் சரி நல்ல விற்பனையை பெற்றுள்ளது. இந்த வகையில் இந்த நிறுவனம் கடந்த மே மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எவ்வளவு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

30 நாளில் இவ்வளவு பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

இந்தியாவில் 7 சீட்டர் கொண கார்கள் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக இருந்து வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க இந்த ரக கார் ஏற்றதாக இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் அதிக எண்ணிக்கையில் விற்பனையான குறைந்த விலை கார் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. எந்த கார் இது? எவ்வளவு விற்பனையாகியுள்ளது? இந்த காரை எவ்வளவு பேர் வாங்கியுள்ளனர்? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே வருஷத்தில் இந்திய கார் மார்க்கெட் மொத்தமா மாறிபோச்சு!!

இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பிரச்சனையே இல்லாமல் முதலிடத்தை மாருதி சுஸுகி (Maruti Suzuki) பிடித்துவிடுகிறது. இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான இதனை கார்கள் விற்பனையில் வேறொரு நிறுவனம் முந்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் போல் இருக்கிறது. இதற்கடுத்து 2வது இடத்தை பிடிப்பது யார் என்பதில்தான் பலத்த போட்டி நிலவி வருகிறது. வழக்கமாக, மாருதி சுஸுக்கு அடுத்து 2வது இடத்தை தென்கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) பிடிப்பது வழக்கம்.

7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் இவ்ளோ கம்மியான விலையில் வருதா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் ஆகும்.

ஹீரோ ஷோரூமில் எப்போதும் நிரம்பி வழியும் கஸ்டமர்ஸ் கூட்டம்!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய உலகின் பிரம்மாண்டமான 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹீரோ நிறுவனத்தில் இருந்து கடந்த 2025 மே மாதத்தில் எத்தனை 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? அவற்றுள் பைக்குகள் எத்தனை? ஸ்கூட்டர்கள் எத்தனை? என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ஹோண்டா கார் ஷோரூமை சும்மா கூட யாரும் எட்டி பார்க்க மாட்றாங்க

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனத்தில் இருந்து கடந்த 2025 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. ஜப்பானை சேர்ந்த கார் நிறுவனமான ஹோண்டா கார்ஸ், இந்தியாவில் தற்போதைக்கு வெறும் மூன்றே மூன்று கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்கிறது. அவை மூன்றும் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.