ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை ஏன் வெள்ளையா இருக்கு?

இந்திய ரயில்வே நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. ரயில்களின் தாமதம் குறைக்கப்படுகிறது. ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு செல்போன் செயலிகள் போன்ற பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. வந்தே பாரத் (Vande Bharat) போன்ற அதிநவீன ரயில்கள் களத்தில் இறக்கப்படுகின்றன.

அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காண போகுது!

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) பொறுப்பேற்றது முதலே சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகள் மீதும் அவர் வர்த்தக போரை நடத்தி வருகிறார். இதில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் கூட தப்பவில்லை.

500கிமீ-க்கு சார்ஜ் கவலையே தேவையில்ல! டொயோட்டாவின் புது கார்

ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான டொயோட்டா, இந்தியச் சந்தைக்கான தனது முதல் மின்சார காரான 'அர்பன் க்ரூஸர் எபெல்லா'வை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே, இது ஒரு எஸ்யூவி வகையைச் சேர்ந்ததாகும். மாருதி சுசுகி இவிட்டாராவை அடிப்படையாகக் கொண்ட இந்த மின்சார எஸ்யூவி, வடிவமைப்பு, பேட்டரி பவர்டிரெய்ன்கள், அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் எனப் பலவற்றை அதன் இணைக் காரிலிருந்து பெற்றுள்ளது.

திடீரென இந்த காரின் விலையை உயர்த்திய மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ நியோ காரின் விலையை இந்த ஜனவரி மாதம் முதல் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்த காரின் விலை ரூ20,000 வரை அதிகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா?நிச்சயம் இது தான் காரணம்

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருவதற்கான காரணங்களை இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம் அதை படித்து உங்கள் காரின் குறைவாகன மைலேஜிற்கான காரணங்களை அறிந்து அதற்கான தக்க நடவடிக்கையை உடனடியாக எடுங்கள். கார் வைத்திருப்பவர்களுக்க மைலேஜ் என்பது மிக முக்கியமான ஒன்று காருக்கு நீங்கள் செலவு செய்யும் தொகையை தீர்மானிப்பது இது தான். இதனால் உங்கள் காரை முடிந்த அளவு அதிக மைலேஜ் தரும்படி பராமரிப்பது மிக முக்கியம்

மாநிலத்திலேயே முதல் ஆளா அமைச்சர் வாங்கி போட்ட கார்...!!

புதிய டாடா சியரா, நவம்பர் 25, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டபோது, சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது பொதுமக்களிடமும், பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் இடையேயும் அதீத ஆர்வத்தைத் தூண்டியது. இதன் விளைவாக, இணையமெங்கும் சியரா பற்றிய தகவல்களும் வீடியோக்களும் நிறைந்து காணப்பட்டன.

பஜாஜ் ஷோரூம்களில் கம்பீரமாக நிற்கும் புது பல்சர் 125 பைக்!

புதிய முகப்பு பகுதி, கிராபிக்ஸ் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்த பஜாஜ் பல்சர் 150 (Bajaj Pulsar 150) பைக்கைப் போலவே, தற்போது அதன் சிறிய மாடலான பல்சர் 125 பைக்கிற்கும் அதே மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே, புதிய 2026 பஜாஜ் பல்சர் 125 பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன.

நானோ போல் விலை குறைவான காரில் அதிநவீன அடாஸ் வசதியா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை வெறும் 5.59 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement

ஸ்கூட்டர் விலை ஏற்கனவே 1 லட்ச ரூபா கூட இல்ல.. இதுல சலுகை வேற

உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட், தனது புதிய சேத்தக் C25 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியா முழுவதும் உள்ள ஷோரூம்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஸ்கூட்டருக்கு, அறிமுகமானது முதல் சந்தைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வருஷத்துக்கு 10 லட்ச கார்களை உருவாக்க புதிய மாருதி ஆலை!!

மாருதி சுசுகி இந்தியா, குஜராத்தில் புதிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்க ₹35,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு, நிறுவனத்தின் உற்பத்தி திறனை கணிசமாக உயர்த்தி, உள்நாட்டு விற்பனை வளர்ச்சி மற்றும் வாகன ஏற்றுமதி இரண்டையும் ஆதரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

4.5 மணிநேரம் சார்ஜ் போட்டா ஸ்கூட்டரை 100கிமீ-க்கு ஓட்டலாம்!

கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்டான ஆம்பியர் (Ampere), தனது புதிய தயாரிப்பான 'மேக்னஸ் ஜி மேக்ஸ்' (Magnus G Max) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியக் குடும்பங்களின் அன்றாடப் பயணத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய ஸ்கூட்டர், 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-இல் ஆம்பியரின் பெயர் இடம்பெறும் அளவிற்கு எட்டு சாதனைகளை படைத்துள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவையே மிரள விட்ட கார்!

இந்திய சந்தையில் சமீப காலமாக மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Entry Level Hatchback Cars) 'டிமாண்ட்' இல்லை. வாடிக்கையாளர்களின் கவனம் அப்படியே முழுக்க முழுக்க எஸ்யூவி கார்களின் (SUV Cars) பக்கம் திரும்பி விட்டது.
Advertisement

திவ்யா கணேசனுக்கு கொடுத்த மாருதி காரில் இத்தனை வசதிகளா!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன் வெற்றியாளரான திவ்யா கணேசன், 2026 ஜனவரி 18 அன்று நடந்த பிரம்மாண்ட இறுதிப் போட்டிக்கு பிறகு ஒரு விரிவான பரிசுத் தொகுப்பை பெற்றார். இதில் ரொக்கப் பரிசு, மதிப்புமிக்க வெற்றி கோப்பை மற்றும் ஒரு புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் கார் ஆகியவை அடங்கும்.

டாடா இருந்த இடமே தெரியாம போக போகுது!

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicles) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). எலெக்ட்ரிக் கார்கள் (Electric cars) மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) என பலதரப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

டாடா இந்த காரை தான் யாருக்கும் தெரியாம உருவாக்குதா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடலின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஹாட்ச்பேக் கார்களுக்கான தேவை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், டாடா நிறுவனம் டியாகோ மாடலின் மீதான நம்பிக்கையைத் தொடர்வதோடு, கடந்த 2025 ஆம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் (EV) ஆகிய இரு மாடல்களுக்கும் மேம்பாடுகளை வழங்கியது.

எம்ஜி உருவாக்கும் புது காரின் விலை எவ்வளவாக இருக்க போகுதோ!!

எம்ஜி மோட்டார் (MG Motor) தனது புதிய விலையுயர்ந்த எஸ்யூவி கார் மாடலாக அறிமுகம் செய்யவுள்ள மெஜெஸ்டர் (Majestor) காரின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது. தற்போதைய எம்ஜி க்ளோஸ்டர் (Gloster) காரை விடவும் விலைமிக்கதாக, அதற்கும் மேல் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த மூன்று-வரிசை எஸ்யூவி கார் பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டு உள்ளது.
Advertisement

சுத்தியல் வச்சு சைலென்சரை உடைத்த போலீஸ்!

வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது சட்டப்படி குற்றம். மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனம் மாடிஃபிகேஷன் ஸ்டேஷன் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. வாகனம் டாக்டரியிலிருந்து சான்றிதழ் பெற்று எப்படி வருகிறதோ அப்படியே பயன்படுத்த வேண்டும். ஆனால் அதையும் மீறி சிலர் அதை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இப்படியாக நடந்த ஒரு சம்பவத்தில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சரை சுத்தியல் கொண்டு ஒரு டிராபிக் போலீஸ் உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடிமாட்டு விலையில் 7 சீட்டர் கார்!

இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கு நல்ல டிமாண்ட் காணப்படுகிறது.

திடீரென இந்த காரை நிறுத்திய நிறுவனம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது விர்டுஸ் மற்றும் டைகுன் ஆகிய கார்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் ஆப்ஷன் கொண்ட வேரியண்டை தற்போதைய விற்பனையிலிருந்து நீக்கி உள்ளது. இதற்கான காரணம் என்ன இந்த ஆப்ஷன் கொண்ட கார் ஏன் நிறுத்தப்பட்டது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அனைத்து கார்களின் மைலேஜூம் குறையப்போகுது!

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயணிகள் கார்களுக்கு மைலேஜ் சோதனை செய்யும்போது பெரும் தலைவலி ஏற்படுத்தும் வகையில் புதிய சட்ட மாற்றம் ஏற்படவுள்ளது. இதன்படி இனி மைலேஜ் சோதனை செய்யும் போது கார்களில் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில் தான் சோதனை செய்யப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

2 வாரத்தில் வரப்போகும் 6 கார்கள்!

இந்தியாவில் தற்போது புதிய வாகனங்களின் வருகை அணிவகுத்து நிற்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் ஆறு எஸ்யூவி காரர்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. இது பிரீமியம் எஸ்வி காரர்களாகவும் இருக்கிறது. சிறிய ரக எஸ்யூவிகளாகவும் இருக்கிறது. ரூபாய் 11 லட்சம் முதல் ரூ45 லட்சம் வரையிலான விலையில் இந்த கார்கள் அறிமுகமாக உள்ளன. இதில் இரண்டு எலெக்ட்ரிக் கார்களும் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

3 வருஷத்தில் காரை கொடுத்துட்டா 60% பணம் திரும்ப கிடைக்கும்!!

ஜீப் இந்தியா (Jeep India) தனது காம்பஸ் (Compass) மற்றும் மெரிடியன் (Meridian) எஸ்யூவி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக 'கான்ஃபிடன்ஸ் 7' (Confidence 7) என்ற புதிய நீண்டகால உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு ஏழு முக்கிய நன்மைகள் வழங்கப்படுகின்றன. இது காரின் மறுவிற்பனை மதிப்பில் 60% வரை உத்தரவாதம் அளிக்கும் உறுதியளிக்கப்பட்ட பை-பேக் (Buy Pack) திட்டம் உட்பட விரிவான பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவையாவன,

ஒரு தெருவையே இந்த கார்ல ஏத்தீட்டு போகலாம்! விலை இவ்ளோதானா!

இந்தியாவில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை வாங்க வேண்டும் என்றால், ஒரு சில கார்கள் மட்டுமே, அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வரும். இதில், மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) காரும் நிச்சயம் ஒன்றாக இருக்கும்.

மணிக்கு 160km வேகத்தில் படுத்துனு போனா வேற லெவலில் இருக்கும்

பிரதமர் நரேந்திர மோடி, ஹவுரா மற்றும் கவுகாத்தி (காமக்யா) இடையேயான நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை மால்டா நகர நிலையத்திலிருந்து ஜனவரி 17, 2026 அன்று மெய்நிகர் முறையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட வங்காளத்தில் நடந்த இந்த நிகழ்வில், கவுகாத்தி-ஹவுரா வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவைக்கான கொடியையும் அவர் அசைத்து தொடங்கி வைத்தார்.
Advertisement

பைக்கை விட குறைவான விலையில் புதிய கார்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான (Electric Vehicles) 'டிமாண்ட்' நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Stations) எண்ணிக்கை உயர்வு போன்ற காரணங்களால், வாடிக்கையாளர்கள் பலரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கூட, அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.