12 லட்ச ரூபாயில் கிடைக்கும் கியா செல்டோஸ் காரின் தோற்றம்!!

கியா இந்தியா (Kia India) நிறுவனம் தனது புதிய 2026 செல்டோஸ் (Seltos) காரை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து டெலிவிரிகள் (Deliveries) துவங்கப்படவுள்ளன. புதிய செல்டோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வெறும் மூனரை லட்சத்துக்கு புது கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso). இந்த காரின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), வி3 கார்ஸ் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

நாடே இந்த வண்டிக்காக தான் வெயிட்டிங்!

பஜாஜ் நிறுவனம் தனது புதிய சேத்தக் சி25 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ91,399 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் 35 மற்றும் 30க்கு கீழ் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜனநாயகன் படத்துக்கு கூட இவ்ளோ பேர் புக் பண்ண மாட்டாங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் ஆகும்.
Advertisement

டாடாவுக்கே தண்ணி காட்டும் எம்ஜி எலெக்ட்ரிக் கார் இதுதான்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் JSW MG மோட்டார் இந்தியா, 2025 டிசம்பரில் மொத்தம் 6,500 யூனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பரில் விற்பனையான 7,516 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 14% சரிவைக் காட்டுகிறது. இருப்பினும், 2025 நவம்பரில் விற்பனையான 5,754 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இது 13% மாதந்தோறும் (MoM) வளர்ச்சியாகும். புதிய 2026 MG ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த விற்பனை உயர்வுக்கு ஒரு காரணமாகும்.

மெர்சிடிஸ் கார்களால் இந்தியாவை பார்த்து உலகமே பொறாமைப்படுது!

இந்தியாவில் இ.க்யூ.எஸ் (EQS) எலெக்ட்ரிக் காரின் கொண்டாட்டப் பதிப்பு (Celebration Edition)-ஐ மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன், முதல்முறையாக மெர்சிடிஸ்-மேபேக் (Mercedes-Maybach) கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய மிக விரைவில் துவங்க போவதாகவும் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

சென்னையை தவிர்க்கிறதா யமஹா? முதல் இ-ஸ்கூட்டர் கர்நாடகாவில்!!

கர்நாடகாவில் ரிவர் மொபிலிட்டி (River Mobility) நிறுவனம் யமஹா இசி-06 (EC-06) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட முதல் இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கர்நாடகாவின் ஹோஸ்கோட் ஆலையில் மாநில தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் வெளியீடு செய்தார். இந்தியாவில் யமஹாவின் இந்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்ன? அதனை ஏன் ரிவர் மொபிலிட்டி என்கிற ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனம் உற்பத்தி செய்கிறது? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

திடீரென லோகோவை மாற்றிய ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது. இந்நிறுவனம் அடுத்ததாக இவி மற்றும் ஹைபிரிட் கார்களில் களம் இறங்கவுள்ள நிலையில் இந்த லோகோவை மாற்றியுள்ளது. இதனால் அந்த பிராண்டிற்கு புதிய அடையாளம் கிடைக்கும் என அந்நிறவனம் எதிபார்க்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

வர்ற மே மாசம் உச்சம் தொட போறது விஜய்யோ, ஸ்டாலினோ இல்ல!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான 'டிமாண்ட்' இருப்பதால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

ஸ்டீயரிங் வீலை எப்படி புடிச்சு ஓட்டணும் தெரியுமா?!

 

  • ஸ்டீயரிங் வீலை எப்படி புடிச்சு ஓட்டணும் தெரியுமா?!
  • பாதுகாப்பான பயணத்திற்கு சரியான விதத்தில் ஸ்டீயரிங் வீலை பிடித்து ஓட்டுவது அவசியம்.
  • இந்த செய்தியில் விரிவாகப் படிக்கலாம்.

 

1 லட்ச ரூபாயை குறைத்தால் பாதி விலை கூட இருக்காதே!!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது 'முஹுரத் மஹோத்சவ்' (Muhurat Mahotsav) சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நிறுவனத்தின் புதிய 4680 பாரத் செல் கொண்ட Ola S1 Pro+ மற்றும் Roadster X+ போன்ற தயாரிப்புகளும் அடங்கும். ஜனவரி 14 முதல் தொடங்கும் இந்த வரையறுக்கப்பட்ட காலச் சலுகையின் விலை விவரங்கள் ஓலா எலெக்ட்ரிக் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்.

இந்தியர்களை ஆட்கொண்ட 2 பிராண்டுகள்!

இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக அந்நிறவனம் தெரிவித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வாகனங்களை தயாரித்து வரும் நிலையில் இந்த விற்பனை சாதனையை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஒரே வருடத்தில் கியாவின் விற்பனை டபுள் மடங்கு அதிகரிப்பு!

கியா இந்தியா நிறுவனம் டிசம்பர் 2025-இல் தனது வரலாற்றிலேயே மிகச் சிறந்த விற்பனை எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 18,659 யூனிட்கள் விற்பனையாகி, ஆண்டுக்கு ஆண்டு 105% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், கியா இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் தயாரிப்பாளர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. எனினும், நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் (25,489 யூனிட்கள்), மாதத்திற்கு மாதம் 27% விற்பனை சரிந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கு 2.8% இலிருந்து 4.6% ஆக உயர்ந்துள்ளது.

10லட்ச ரூபாயில் புதுசா கார் வாங்குவதா இல்ல தங்கம் வாங்குவதா?

இந்தியாவில் ரூ.10 லட்சம் முதலீடு செய்யும்போது, புதியதாக கார் வாங்குவதை விட தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்த நிதி ஆதாயங்களை வழங்கும். கார் ஒரு மதிப்பிழக்கும் சொத்து என்பதால், அதன் மதிப்பு காலப்போக்கில் குறைகிறது. ஆனால், தங்கம் வரலாற்று ரீதியாக வளர்ந்து, பணவீக்கத்திற்கு எதிரான வலுவான பாதுகாப்பாக நிற்கிறது.

மெக்லாரன் கார் வாங்கும் அளவுக்கு தொழிலில் பணம் கொட்டுது...!!

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் டாக்டர் விஜூ ஜேக்கப் (Viju Jacob), சின்தைட் இண்டஸ்ட்ரீஸ் (Synthite Industries) நிறுவனத்தின் தலைவர் ஆவார். மசாலாப் பொருட்கள் பிரித்தெடுக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தின் தொழிலதிபர் என்பதால் இவரை 'மசாலா கிங்' (Masala King) என்று அழைக்கின்றனர். பெரும்பாலான மலையாள தொழிலதிபர்களை போலவே ஆடம்பர கார் பிரியரான இவர், தற்போது தனது கார் சேகரிப்பில் மேலும் ஒரு புதிய விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car)-ஐ இணைத்துள்ளார்.

ரூ.6.50 லட்சத்தில் கிடைக்கும் புதிய டாடா காரின் தோற்றம்!!

புதிய டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift) கார் இன்று (ஜன.13) அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த காரின் விலை குறைவான 'பியூர்' வேரியண்டின் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன. புதுப்பிக்கப்பட்ட பன்ச் கார்கள் வரிசையில், எண்ட்ரி-லெவல் 'ஸ்மார்ட்' (Smart) வேரியண்ட்டிற்கு அடுத்தபடியாக பியூர் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement

தமிழ்நாட்டை நம்பி வந்தவங்க கெட்டு போனதா வரலாறே இல்ல!

இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 6,434 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிரடி முடிவு!

ஒரு கார் நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்றால், விற்பனைக்கு பிந்தைய சேவைகள் சிறப்பாக இருக்க வேண்டும். அதாவது சர்வீஸ் சிறப்பாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு புதிய காரை வாங்கும்போது, சர்வீஸ் சிறப்பாக செய்யப்படுகிறதா? என்பதையும் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். ஒருவேளை சர்வீஸ் சிறப்பாக இல்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் காரை வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை.

இதுக்கு மேல என்ன நிரூபிக்கனும்? டாடா உருவாக்கிய புதிய பன்ச்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், கார்களின் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து புதிய தரநிலைகளை நிர்ணயித்து வருகிறது. பாதுகாப்பான கார்களை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழும் டாடாவின் பங்களிப்பு, இந்திய சாலைகளில் உறுதியான மற்றும் பாதுகாப்பான வாகனங்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கியுள்ளது. 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் இந்திய உற்பத்தியாளர் என்ற பெருமையைத் தாங்கிய டாடா, இன்று (ஜன.13) பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்துள்ள தனது புதிய 'பன்ச்' (Punch) காரின் பாதுகாப்புத் திறனை ஒரு வித்தியாசமான முறையில் நிரூபித்துள்ளது.

ஒரே மாதத்தில் கஸ்டமர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் குறைஞ்சிடுச்சு

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம் கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் 42,416 கார்களை விற்பனை செய்துள்ளது. இத்தனை ஆயிரம் கார்களை விற்பனை செய்து இருந்தாலும், இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஹூண்டாய் தனது வழக்கமான 2வது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. ஏனெனில், மஹிந்திரா (Mahindra) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்கள் அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளன.
Advertisement

டாடா நானோ மாதிரி குறைவான விலை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இன்று (ஜனவரி 13) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல், அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மலையில் கார் ஓட்டும்போது நிறைய பேர் இதை ஃபாலோ பண்றது இல்லை!!

தினசரி அலுவலக பணிகளில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது சிறந்த யோசனை ஆகும். மலைப்பாதைகளில் வாகனங்களை ஓட்டி செல்வது எந்த அளவிற்கு ஜாலியானதோ அந்த அளவிற்கு அதில் ஆபத்துகளும் நிறைந்துள்ளன என்பதை மறவாதீர்கள். இத்தகைய பயணங்களில் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு கூட பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். தினந்தோறும் மலை பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்களது அனுபவத்தால் டிரைவிங்கில் கைத்தேர்ந்தவர்களாக இருப்பர். எப்போதாவது ஒருமுறை மலை பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு தான் பிரச்சனையே. அத்தகையவர்கள் இந்த 4 அடிப்படை விஷயங்களை கட்டாயமாக பின்பற்றவும்.

மாருதியில் இந்த காரை வாங்குவதற்கு 22 ஆயிரம் பேர் ஆர்வம்!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, 2025 ஆம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், அந்நிறுவனத்தின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YoY) 37% உயர்ந்துள்ளது. மாதாமாதம் (MoM) 4% வளர்ச்சி பெற்று, ஒட்டுமொத்த விற்பனை 1,78,646 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்திய வாகனச் சந்தையில் 44% பங்களிப்புடன் மாருதி முதலிடத்தில் நீடிக்கிறது.

75 கிராம் தங்கத்திற்கு இணையான விலையில் ஹூண்டாய் கிரெட்டா!!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்திய சந்தையில் தற்சமயம் மக்கள் பலரும் மிகவும் விரும்பும் கார்களுள் ஒன்று. விலை சற்று அதிகமாக இருப்பதினாலேயே பலர் இந்த ஹூண்டாய் காரை வாங்க முடியாத சூழல் உள்ளதே தவிர்த்து, கிரெட்டாவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்குவதற்கு எவ்வளவு தங்கம் (Gold) தேவைப்படும் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா?
Advertisement

17 வருஷத்துக்கு பின் சென்னையை கலக்க போகும் டபுள்-டக்கர் பஸ்!

சென்னையின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், எலெக்ட்ரிக்கில் இயங்கும் புதிய இரு அடுக்கு பேருந்து (Double-decker Bus) சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜனவரி 12, 2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அசோக் லேலண்ட் (Ashok Leyland), ஸ்விட்ச் மொபிலிட்டி (Switch Mobility) ஆகிய நிறுவனங்களும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோரும் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு இந்தப் பேருந்தை பரிசளித்துள்ளனர்.