ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸின் முதல் காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங்

இந்தியாவின் பெரும் வணிக குழுமங்களுள் ஒன்று, புனேவை சேர்ந்த ஜே.எஸ்.டபிள்யூ (JSW) ஆகும். ஐபிஎல் கிரிக்கெட் (IPL Cricket) தொடரில் கூட ஒரு அணிக்கு ஸ்பான்சர் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரம், தனியாகவும் ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் என்கிற பெயரில் செயல்பட தயாராகி வருகிறது.

மூன்று ஸ்கூட்டர்களின் விற்பனையை நிறுத்திய நிறுவனம்

இந்தியாவில் நாலைந்து ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வந்த முக்கியமான நிறுவனங்களில் இத்தாலிய நிறுவனமான ஏப்ரிலியாவும் (Aprilia) ஒன்று. இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான எரிபொருள் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் கிளாஸியான டிசைனுடன் அல்லது ஃபேமிலி டிசைனுடனான ஸ்கூட்டர் மாடல்களையே தயாரித்து வந்த நிலையில், ஏப்ரிலியா மட்டுமே ஷார்ப்பான ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட ஸ்கூட்டர்களை உருவாக்கி வந்தது.

5 பேர் மட்டுமே போகக்கூடிய கார் என்றாலும் வாங்கி போடுறாங்க!

டாடா பன்ச் (Tata Punch), இன்றைய சூழலில் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்று. கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் பன்ச் கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக டாடா பன்ச் 2வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிரெட்டா காரில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவந்த ஹூண்டாய்!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு தற்போதைக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகும் இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்றாக கிரெட்டா விளங்குகிறது. இந்த நிலையை தொடர, அவ்வப்போது கிரெட்டா காரில் புதிய அப்கிரேட்களை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவருகிறது.
Advertisement

இந்தியாவில் 5 புதிய பைக்குகளை வெளியிடும் ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அக்ரஸிவ்வாக புதிய பைக் மாடல்களை வெளியிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு. கடந்த 10 ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டு என்றாலே புல்லட், கிளாஸிக் போன்ற ஒரு சில பைக் மாடல்கள் தான் என்ற நிலை மாறி தற்போது 10-க்கும் மேற்பட்ட பைக் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. பத்தாண்டுக்கு முன்பாக சில லட்சங்களில் இருந்த ராயல் என்ஃபீல்டின் விற்பனை, கடந்த நிதியாண்டு 12 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

எர்டிகா போல் இன்னொரு 7 சீட்டர் காரை களமிறக்கும் மாருதி...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). 7 சீட்டர் எம்பிவி ரக காரான மாருதி சுஸுகி எர்டிகாவின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

எர்டிகாவை விட குறைந்த விலையில் வரும்போதே டவுட் வந்துச்சு!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக எர்டிகா (Ertiga) உள்ளது. அளவில் பெரியதான எம்பிவி (MPV) ரக காராக இருப்பினும், ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் எர்டிகா கார்கள் அசால்ட்டாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலேயே எர்டிகா எஸ்-சிஎன்ஜி (Ertiga S-CNG) காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கார் பராமரிப்பு: வெப்ப அலையில் இன்ஜினை காப்பது எப்படி?

மே 7 வெப்ப அலை எச்சரிக்கை: உங்கள் காரின் இன்ஜினைப் பாதுகாக்க கூலண்ட் மற்றும் டயர் பராமரிப்பு அவசியம். Follow these essential car care tips to prevent engine failure and costly repairs this summer.
Advertisement

டிவிஎஸ் நார்டன் மேங்க்ஸ் R சூப்பர் பைக் அறிமுகம்

டிவிஎஸ் (TVS) நிறுவனத்திடமிருந்து இருந்து எதிர்பார்க்கப்பட்ட புத்தம் புதிய பைக் அறிமுகமாகியிருக்கிறது. டிவிஎஸ் என்றால் நேரடியாக டிவிஎஸ் நிறுவனம் கிடையாது, டிவிஎஸ்ஸின் துணை நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Norton Motorcycles) இங்கிலாந்தில் தங்களுடைய புதிய 'மேங்க்ஸ் R' (Manx R) சூப்பர்பைக் மாடலை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பைக்கின் அனைத்து அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது அந்நிறுவனம்.

தமிழ்நாடே வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடிய ராயல் என்பீல்டு!

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னைதான் (Chennai) ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமையிடம் (Headquarters) ஆகும். எனவே இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் மட்டுமே அமைந்துள்ளன.

விஜய் ஆட்டியில் ஆவது சாலைகளில் இந்த மாற்றம் நடக்குமா?

சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது டெல்லியில் முழுவதுமாக டிஜிட்டலாக மாறியுள்ளது. அதாவது, விதிமீறல்களில் ஈடுப்படுவோரை சாலையெங்கிலும் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணித்து இ-செல்லானை இ-மெயிலுக்கு அனுப்பும் நடைமுறையை டெல்லியில் கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர். முன்னதாக நகரத்தின் முக்கியமான சாலைகளில் மட்டுமே இந்த முறையை பின்பற்றி வந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

புதிய 7 சீட்டர் காரை களமிறக்கும் டொயோட்டா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). தற்போதைய நிலையில் 5 சீட்டர் வெர்ஷனில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 2 வரிசை இருக்கை அமைப்பை மட்டுமே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கொண்டுள்ளது.
Advertisement

ஹூண்டாய் கிரெட்டா தான் மொத டார்க்கெட்! சீன கார்கள் சோதனை!

ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் (JSW Motors) நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. எம்ஜி மோட்டார் (MG Motor) உடன் ஏற்கனவே இணைந்து செயல்பட்டாலும், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனியாகவும் ஆட்டோமொபைல் துறையில் செயல்பட திட்டமிட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸில் இருந்து முதலாவதாக அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

ரூ.3 லட்சம் சலுகை விலையில் கிடைக்கும் மாருதி கார்

வாடிக்கையாளர்கள் கார்களை வாங்குவதை எளிமையாக்கும் விதமான ஒவ்வொரு மாதமும் கார்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மே மாதம் மாருதியின் கார்கள் பலவும் சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி அதிகபட்ச சலுகையுடன் விற்பனை செய்யப்ட்டு வரும் மாருதி கார் குறித்தே இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஏஎம்டி கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!

How to Drive an Automated Manual Transmission Cars. Read in Tamil.

 

கார் வாங்கும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்!

Important things to know while buying a car.

 
Advertisement

ஹைட்ரஜனில் இயங்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அறிமுகம்!

இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles), ஹைப்ரிட் வாகனங்கள் (Hybrid Vehicles) மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் (CNG Vehicles) பிரபலமாக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் இல்லாமல் முழுமையான எத்தனாலில் இயங்கும் பைக்

20% எத்தனால் கலப்பு கொண்ட E20 பெட்ரோலை இந்தியாவில் நிரந்தரமாக்கியதற்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் 100% எத்தனாலில் இயங்கக்கூடிய பைக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது யமஹா. ஆனால் இந்தியாவில் இல்லை, பிரேசிலில். உலகளவில் எத்தனாலை பெருமளவில் வாகன எரிபொருளாகப் பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ளது பிரேசில். 100% எத்தனாலில் இயங்கக்கூடிய பைக்குகள் அல்லது கார்கள் எல்லாம் அங்கு சாதாரணம்.

மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக டாடா சியரா இவி!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்ததாக சியரா இவி (Sierra EV) எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன் உடனான சியரா கார் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், சியரா இவி காரின் அறிமுகத்திற்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

விலை குறைக்கப்பட்ட சிறிய இன்ஜின் கேடிஎம் பைக்குகளை வாங்கலாமா

350 சிசி இன்ஜின் கொண்ட 390 டியூக் மற்றும் 390 அட்வென்சர் பைக் மாடல்களை சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம். ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் நன்மைகளைப் பெறுவதற்காக இந்த சிறிய இன்ஜின் கொண்ட புதிய பைக் மாடல்களை கேடிஎம் வெளியிட்டுள்ளது. 399 சிசி இன்ஜின் கொண்ட 390 டியூக் மற்றும் 390 அட்வென்சர் பைக்குகளை வாங்கலாமா அல்லது 350 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளை வாங்கலாமா என்பதற்கான விடையை இங்கே பார்க்கலாம்.
Advertisement

இந்தியாவில் ஹூண்டாய்க்கு வயது 30... ரூ.45,000 கோடி முதலீடு!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்திய சந்தையில் இப்போதுதான் நுழைந்தது போன்று இருந்தது, ஆனால் அதற்குள் 30 வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்த 30 வருடங்களில் இந்தியாவில் ஹூண்டாய் செய்த சாதனைகள் என்ன என்பதையும், கடந்துவந்த மைல்கல்கள் என்னென்ன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டரை குறைவான விலையில் வாங்கலாம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்கள் மிகவும் கிளாஸியான டிசைன் கொண்ட மாடல்களில் ஒன்றாக யமஹாவின் ஃபேஸினோவைக் கூறலாம். சமீபத்தில் தான் இந்த ஸ்கூட்டரை யமஹா அப்டேட் செய்தது. அப்டேட் செய்யப்பட்ட போது அதன விலையையும் உயர்த்தியிருந்தது யமஹா. தற்போது மீண்டும் இந்த ஸ்கூட்டரின் விலையை உயர்த்தியுள்ளது.

வெறும் 5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் சூப்பர் கார்

இந்தியாவில் மிக மிகக் குறைவான விலை கொண்ட கார்களில் இதுவும் ஒன்று. ஆனால் மாருதி இது மாருதி கார் இல்லை, ரெனோவின் க்விட்டும் இல்லை. நாம் பேசிக் கொண்டிருப்பது சிட்ரன் நிறுவனத்தின் C3 கார் மாடலைப் பற்றித் தான். 5 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்த ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது சிட்ரன். தற்போது இதன் விலையை கணிசமான அளவில் உயர்த்தியும் கூட 5 லட்சத்தைத் தாண்டவில்லை.

எர்டிகா காரை போன்று தோற்றம்... மாருதி சுஸுகியின் புதிய கார்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு வர உள்ள கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 'ஹேமந்த் ஆன் ரோடு' (Hemant On Road) என்கிற யூடியூப் (Youtube) சேனலின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ஸ்விஃப்ட்லாம் எலெக்ஸனுக்கு முன்னாடி!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (Tamil Nadu Election Results) வெளியாகி, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதுதான் இந்த ஆச்சரியத்திற்கு காரணம்.