காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

கிளட்சை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற சில விதிகள் உள்ளது.  உங்கள் ஆர்.பி.எம் குறிப்பிட்ட அளவு குறையும் வரை நீங்கள் கிளட்சை பயன்படுத்த தேவையில்லை. அதிக வேகத்தில் காரில் செல்லும் போது நீங்கள் காரின் கிளட்சை பிடித்தால் கார் அதை நியூட்டரலாக கருதி காரின் வேகம் மேலும் அதிகரிக்குமே தவிர வேகம் குறையாது. ஆர்.பி.எம் குறிப்பிட்ட அளவிற்கு குறைந்த பின்பு தான் கிளட்சை பிடிக்க வேண்டும்.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

4வழிச்சாலையில் செல்லும் போது ஏற்படும் பல விபத்துக்கள் லேன் மாறுவதில் தான் ஏற்படுகிறது. அதை தடுக்க சில லேன் மாறும் விதிகள் குறித்து நீங்கள் அறிவது கட்டாயம்.இடது பக்கம் உள்ள லேன் சாதாரணமாக வாகனங்கள் செல்வதற்கும் வலது பக்கம் உள்ள லேன் முன்னால் செல்லும் வாகனங்களை விட பின்னால் வரும் வாகனங்கள் வேகம் அதிகமாக இருந்தால் அவர்கள் ஓவர் டேக் செய்வதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை கடைசி இடத்தில் யமஹா

இந்தியாவின் எரிபொருள் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஜப்பானிய நிறுவனங்களான ஹோண்டா மற்றும் சுஸூகி ஆகியவை அதிகளவிலான விற்பனையுடன் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்று வரும் போது இன்னும் இந்த இரண்டு நிறுவனங்களும் முதல் வெற்றியை சுவைக்கவில்லை. வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தைக்கு கொண்டு வரும் திட்டமும் இந்த நிறுவனங்களிடம் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை.

இந்தியாவில் தனது முதல் காருக்கு புதிய அவதாரம் குடுத்த ஹோண்டா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). மிட்-சைஸ் செடான் (Mid-size Sedan) ரகத்தை இந்த கார், இந்திய சந்தையில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.
Advertisement

ஏன் மக்கள் டொயோட்டா எம்பிவியை அதிகம் வாங்குகிறார்கள்?

டொயோட்டா என்ற பெயர் சொல்லியவுடன் அனைவரது மனதிலும் தோன்று ஒரு கார் மாடல் என்றால் இன்னோவா தான். நல்ல இடவசதி கொண்ட ப்ரீமியமான எம்பிவி காராக இன்னோவாவை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அணிவகுப்பில் கூட இடம் பெறும் ஒரு கார் மாடலாக டொயோட்டாவின் இன்னோவா இருந்து வருகிறது.

இந்த 110 சிசி ஸ்கூட்டரையும் ஒரு முறை பரிசீலனை செய்யலாம்

ஸ்கூட்டர் ஒன்று வாங்க வேண்டும், ஆனால் எல்லோரும் வைத்திருப்பதைப் போல இல்லாமல் தனித்துவமானதாக இருக்க வேண்டும், வசதிகளிலும் பெரிய அளவில் குறை இருக்கக்கூடாது, பிராக்டிகலான குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற கிளாஸியான ஸ்கூட்டராக இருக்க வேண்டும், எதை வாங்குவது? ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரை பரிசீலனை செய்யலாம்.

கொரியன் கம்பெனியில் இதைவிட கம்மியான விலையில் கார் இல்ல...!!

கியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட கார்களுள் ஒன்று, புதிய தலைமுறை சொனெட் ஆகும். அதாவது, தற்சமயம் விற்பனையில் இருக்கும் சொனெட் காரின் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய கியா சொனெட் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட அதிக மைலேஜ் தரும் இ-ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் டெல்லியில் மட்டுமே பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100-க்குள் உள்ளது. இருப்பினும், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய விலை உயர்வினால் டெல்லியிலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100ஐ நெருங்கியுள்ளது. இதனால், டெல்லியை தவிர்த்து நாடு முழுவதுமே பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி செல்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோல் ஸ்கூட்டரே வேண்டாம் என எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடிவெடுத்து விட்டீர்கள் என்றால், உங்களுக்காகவே இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

கருப்பு சூர்யா மாதிரி கம்பேக் கொடுத்த கார்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இந்திய சந்தையில் இதன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. எனவே சைரோஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை கியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

வெயில் காலத்தில் காரில் இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படும்!!

அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு இன்னும் 1 மாத காலம் இருக்கும் நிலையில், இப்போதே கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலில் இருந்து நம்மை பாதுகாப்பது போன்று, நம் காரையும் பாதுகாப்பது அவசியமாகும். கோடை காலத்தில், கார் பயணத்தின்போது எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, காரில் என்னென்ன விஷயங்களை முன்கூட்டியே சரிப்பார்த்து வைக்க வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.

இந்த காலத்திலும் லிட்டருக்கு 65km மைலேஜ் வழங்கும் ஹீரோ பைக்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள், ஸ்பிளெண்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா? ஸ்பிளெண்டர் அளவிற்கு இல்லையென்றாலும், ஹீரோ நிறுவனத்தில் இருந்து இன்னொரு பைக்கும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகிறது.

அடுத்த ஒரு வருடத்தில் நாடே எதிர்பார்க்கும் 3 டாடா கார்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்த ஒரு வருடத்தில் 6 தயாரிப்புகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சியரா இவி எலெக்ட்ரிக் காரும் ஒன்றாகும். இதில் இன்னும் வேறு என்னென்ன மாதிரியான டாடா கார்கள் களமிறக்கப்பட உள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
Advertisement

அதிக ரேஞ்சை கொடுக்கும் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என நிறைய வாடிக்கையாளர்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எரிபொருள் ஸ்கூட்டர்களையே வாங்கவேன் என அடம்பிடிக்கும் சில வாடிக்கையாளர்கள் கூட அதன் ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தால் கவரப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் அற்ப விலையில் கிடைக்கும் டீசல் எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் விற்பனையில் உள்ள டீசல் கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. அதாவது, பல்வேறு காரணங்களினால் டீசல் கார்களின் விற்பனையை அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் நிறுத்தி வருகின்றன. உதாரணத்திற்கு, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சொல்லலாம். இருப்பினும், டீசல் என்ஜின் உடன் எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்காக சில கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இழுத்து மூட வேண்டிய பைக் கம்பெனியை கை கொடுத்து தூக்கும் TVS

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இப்படித்தான் வருடக்கணக்கில் கூறப்பட்டு வருகிறது என்றாலும், இந்த முறை மிக விரைவாகவே நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான விலையில் புதிய எஸ்யூவியை வெளியிடும் மாருதி

மாருதியின் சப் 4 மீட்டர் எஸ்யூவி காராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது பிரெஸ்ஸா. உலகில் இந்தியாவில் மட்டுமே சப் 4 மீட்டர் என்ற கார் பிரிவு இருக்கிறது. 4 மீட்டர்கள் நீளத்திற்கு உள்ளான இந்தக் கார்களுக்கு 18% வரை மட்டுமே மத்திய அரசு வரி விதித்துள்ளது. 4 மீட்டர்கள் நீளத்திற்கும் மேலான கார்கள் பெரிய கார்களாகக் கணக்கிடப்பட்டு 40% வரி விதிக்கப்பட்டு வருகிறது.
Advertisement

இந்தியாவில் உயரும் தென் கொரிய கார் நிறுவனத்தின் விற்பனை

இந்தியாவில் ஹோண்டா, ரெனோ, ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் கார்களை விற்பனை செய்ய தினரும் நிலையில், அதனை அல்வா சாப்பிடுவது போல செய்யும் ஒரு நிறுவனம் கியா. கடந்த ஏப்ரல் மாதம் 27,286 கார்களை இந்தியாவில் அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனை விட அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இருக்கும் போது கியாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பில்ட்-அப் என்று கேட்கிறீர்களா.

இந்த கார்லாம் விக்கவே விக்காதுனு நெனச்சாங்க! ஆனா...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் கூட, இதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.

குறைவான விலையில் வாங்கக்கூடிய 7 சீட்டர் எஸ்யூவிக்கள்

முன்பை விட இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் இந்தியாவில் கார் வாங்க முன்வருகிறார்கள். இந்தியாவில் கார் என்பது ஒரு சொகுசுப் பொருள், ஒரு முறை வாங்கக்கூடிய ஒரு பொருள். எனவே முதல் முறை வாங்கும் போதே அனைத்து விதமான தேவைகளுக்கும் ஏற்ப இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே வாங்குவார்கள். அதில் நீண்ட தூரம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் செய்யும் கோயில் பயணமும் அடங்கும்.

ஏன் மக்கள் தேடிப் போய் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குகிறார்கள்

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் எதுவென்று தெரியுமா. அது எம்ஜி மோட்டாரின் விண்ட்ஸர் EV தான். 2024 செப்டம்பரில் இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது எம்ஜி மோட்டார். அப்போதிலிருந்து இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் காராக விண்ட்ஸர் EV-யே இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 4,000 யூனிட்டுகள் முதல் 5,000 யூனிட்டுகள் வரை இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
Advertisement

புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் காரை விரைவில் வெளியிடும் மாருதி

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது மாருதி சுஸூகி தான். மற்ற நிறுவனங்கள் விற்பனை செய்வதை வில இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிக கார்களை ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸூகி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் எலெக்டரிக் கார்கள் விற்பனையில் இதுவரை மாருதி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

முதல்வர் விஜய் உடன் சந்திப்பு வேற லேட்டஸ்ட்டா நடந்து இருக்கு

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் CEO மார்கஸ் ஃபிளாஸ்ச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் புதிய பைக்குகளுக்கு மத்தியில் CEO மார்கஸ் ஃபிளாஸ்ச் நின்றிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தில் காட்சித்தரும் பைக்குகள் தான் அடுத்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளவை ஆகும்.

பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ உயர்ந்தாலும் பிரச்சனையே இல்ல!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). இந்த கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ள டாடா சியரா காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரெனால்ட் விற்பனை எகிறியது!

ஃபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் சமீப காலமாக தத்தளித்து கொண்டிருந்தது. ஆனால் ரெனால்ட் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் தற்போது கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. இதற்கு ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) காரின் 'கம்பேக்' மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
Advertisement

காரின் சக்கரங்களில் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்!!

Signs Your Car Needs Wheel Alignment | சீரற்ற டயர் தேய்மானம், டிரிஃப்டிங், வளைந்த ஸ்டீயரிங் வீல், அதிர்வுகள் மற்றும் சத்தமிடும் டயர்கள் அனைத்தும் உங்கள் காருக்கு வீல் சீரமைப்பு தேவை என்பதற்கான அறிகுறிகளாகும்.