இந்தியாவில் ஹூண்டாயின் இரண்டு புதிய கார்கள் இவை தான்

இந்தியாவில் மாருதிக்கு அடுத்தபடியாக அதிக கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக ஹூண்டாய் இருந்து வந்தது. ஆனால் சமீபமாக அதன் விற்பனை எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களிடம் விற்பனை அளவில் தோற்று வருகிறது ஹூண்டாய்.

பெரிய கனவோடு ஹோண்டா அறிமுகப்படுத்திய பைக்!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) நிறுவனத்திற்கு விலை குறைவான பைக்குகள் தான் விற்பனையில் எப்போதும் நம்பிக்கை அளிக்கக் கூடியவைகளாக இருந்துள்ளன. அதிக விலையில் பல்வேறு விதமான பிரீமியம் பைக்குகளை இந்தியாவில் ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. ஆனால், அவற்றுள் மக்களின் கவனத்தை ஈர்த்தவை மிக சில மட்டுமே ஆகும்.

மாருதி காரை விட மிகவும் குறைவான விலையில் கியா கார்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

ரூ.76,000இல் குடும்பங்கள் கொண்டாடும் ஏத்தர் இ-ஸ்கூட்டர்!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆக ரிஸ்டா (Rizta) விற்பனை செய்யப்படுகிறது. 2024 ஏப்ரல் 6ஆம் தேதி ரிஸ்டா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து பெர்ஃபார்மன்ஸ் மிக்க '450' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஃபேமலி ஸ்கூட்டராக ரிஸ்டா அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement

இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையா யமஹா வெளியிடுகிறது?

EC-06 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் வாகனமாக வெளியிட்டது யமஹா (Yamaha). ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இன்டீ (Indie) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் இந்த EC-06 உருவாக்கப்பட்டது. இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, பெங்களூருவைச் சேர்ந்த ரிவர் மொபிலிட்டி என்ற எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினுடையது.

எல்லா பணக்காரர்களிடம் இதில் ஒரு கார் நிச்சயமாக இருக்கும்!

சொகுசு கார்கள் என்றாலே குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்துவதற்கும், எப்போதாவது தொலைத்தூர பயணங்களுக்காக நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கும் தான் அதிகமாக உபயோகிக்கப் படுத்தப்படுகின்றன. ஆனால், விலையுயர்ந்த கார்களிலும் கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு பயன்படுத்தக்கூடிய கார்கள் உள்ளன. அவ்வாறான விலையுயர்ந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

30 கிமீக்கும் அதிகமான மைலேஜ்! 6 லட்சத்துக்கு புது கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இதில், மொத்தம் 5 பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் (Powertrain Options) வழங்கப்படவுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கார்

இந்தியாவில் தற்போது மிகவும் விலை குறைவான கார் என்றால் அது மாருதி சுஸூகியின் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) தான். இந்த குட்டி ஹேட்ச்பேக் காரினை 3.50 லட்சம் ரூபாய் முதல் 5.25 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் காருக்கான மே மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement

காரில் இன்ஜின் எந்த பக்கம் அமைந்திருந்தால் பெஸ்ட்?

கார் வாங்கும்போது இந்த காரில் இன்ஜின் முன்புறம் உள்ளது. இந்த காரில் இன்ஜின் பின்புறம் உள்ளது. இதில் இன்ஜின் காரின் நடுவில் உள்ளது என கூறவதை நாம் கேட்டிருப்போம்.
ஆனால் இன்ஜின் வேறு வேறு இடங்களில் இருப்பதனால் என்ன பலன் என்று பலருக்கு தெரியாது. காரின் ஒட்டுமொத்த பெர்பாமென்ஸ் இன்ஜின் இருக்கும் இடத்தை பொருத்து தான் இருக்கிறது.

இன்ஜின் ஆயுளை அதிகரிக்க 5 டிப்ஸ்

வாகனங்கள் வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு தனது வாகனத்தின் இன்ஜின்னை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலர் மத்தியில் இருக்கிறது.காருக்கு இன்ஜின் என்பது மனிதனுக்கான இதயம் போல அதை சரியா பராமரிக்காவேண்டும். குறைந்தது அதில் பிரச்னை ஏற்படும் போதாவது சரி செய்ய வேண்டும். அதை சரியாக பராமரிக்காவிட்டால் இன்ஜினின் வாழ்நாள் குறைந்து விடும்

டாடா நெக்ஸான் புதிய வேரியன்ட் கூடுதல் வசதிகளுடன்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு சப்-காம்பேக்ட் எஸ்யூவி காராக இருந்து வருகிறது டாடா நெக்ஸான். இந்தக் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்க புதிய வேரியன்ட் ஒன்றை விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அந்தப் புதிய வேரியன்ட் எது, அதில் என்னென்ன சிறப்பான வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்னும் தகவல்கள் எல்லாம் இப்போது கசிந்திருக்கிறது. அது குறித்துப் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி ஈக்கோ வாகனத்திற்கான ஸ்டார் எடிஷன் பேக்கேஜ்!

மாருதி சுஸுகி (Maruti Suzki) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் ஆம்னி (Omni) வேனின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தனது மற்றொரு வேன் மாடலான ஈக்கோ (Eeco)-ஐ மாருதி சுஸுகி மேலும் பலப்படுத்தியுள்ளது. இதற்காக புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டார் எடிஷன் ஆக்ஸஸரீ பேக்கேஜ் (Star Edition Accessory Package)-ஐ பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ஹீரோ ஹார்லி கூட்டணியில் வெளியாகும் புதிய விலை குறைவான பைக்

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது ஹார்லி டேவிட்சன் (Harley Davidson). இந்த நிறுவனங்களின் கூட்டணியில் ஹார்லி டேவிட்சன் பிராண்டின் கீழ் X440 மற்றும் X440 T ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்பிரின்ட் 440 (Sprint 440) என்ற மற்றொரு புதிய குறைவான விலை கொண்ட பைக் மாடலையும் வெளியிடவிருப்பதாக ஹார்லி டேவிட்சன் அறிவித்துள்ளது.

வெறும் 5 லட்சத்துக்கு புது எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான அதே நேரத்தில் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்றாகும்.

ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸின் முதல் காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங்

இந்தியாவின் பெரும் வணிக குழுமங்களுள் ஒன்று, புனேவை சேர்ந்த ஜே.எஸ்.டபிள்யூ (JSW) ஆகும். ஐபிஎல் கிரிக்கெட் (IPL Cricket) தொடரில் கூட ஒரு அணிக்கு ஸ்பான்சர் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரம், தனியாகவும் ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் என்கிற பெயரில் செயல்பட தயாராகி வருகிறது.

மூன்று ஸ்கூட்டர்களின் விற்பனையை நிறுத்திய நிறுவனம்

இந்தியாவில் நாலைந்து ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வந்த முக்கியமான நிறுவனங்களில் இத்தாலிய நிறுவனமான ஏப்ரிலியாவும் (Aprilia) ஒன்று. இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான எரிபொருள் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் கிளாஸியான டிசைனுடன் அல்லது ஃபேமிலி டிசைனுடனான ஸ்கூட்டர் மாடல்களையே தயாரித்து வந்த நிலையில், ஏப்ரிலியா மட்டுமே ஷார்ப்பான ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட ஸ்கூட்டர்களை உருவாக்கி வந்தது.
Advertisement

5 பேர் மட்டுமே போகக்கூடிய கார் என்றாலும் வாங்கி போடுறாங்க!

டாடா பன்ச் (Tata Punch), இன்றைய சூழலில் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்று. கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் பன்ச் கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக டாடா பன்ச் 2வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிரெட்டா காரில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவந்த ஹூண்டாய்!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு தற்போதைக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகும் இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்றாக கிரெட்டா விளங்குகிறது. இந்த நிலையை தொடர, அவ்வப்போது கிரெட்டா காரில் புதிய அப்கிரேட்களை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவருகிறது.

இந்தியாவில் 5 புதிய பைக்குகளை வெளியிடும் ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அக்ரஸிவ்வாக புதிய பைக் மாடல்களை வெளியிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு. கடந்த 10 ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டு என்றாலே புல்லட், கிளாஸிக் போன்ற ஒரு சில பைக் மாடல்கள் தான் என்ற நிலை மாறி தற்போது 10-க்கும் மேற்பட்ட பைக் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. பத்தாண்டுக்கு முன்பாக சில லட்சங்களில் இருந்த ராயல் என்ஃபீல்டின் விற்பனை, கடந்த நிதியாண்டு 12 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

எர்டிகா போல் இன்னொரு 7 சீட்டர் காரை களமிறக்கும் மாருதி...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). 7 சீட்டர் எம்பிவி ரக காரான மாருதி சுஸுகி எர்டிகாவின் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

எர்டிகாவை விட குறைந்த விலையில் வரும்போதே டவுட் வந்துச்சு!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக எர்டிகா (Ertiga) உள்ளது. அளவில் பெரியதான எம்பிவி (MPV) ரக காராக இருப்பினும், ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் எர்டிகா கார்கள் அசால்ட்டாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலேயே எர்டிகா எஸ்-சிஎன்ஜி (Ertiga S-CNG) காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கார் பராமரிப்பு: வெப்ப அலையில் இன்ஜினை காப்பது எப்படி?

மே 7 வெப்ப அலை எச்சரிக்கை: உங்கள் காரின் இன்ஜினைப் பாதுகாக்க கூலண்ட் மற்றும் டயர் பராமரிப்பு அவசியம். Follow these essential car care tips to prevent engine failure and costly repairs this summer.

டிவிஎஸ் நார்டன் மேங்க்ஸ் R சூப்பர் பைக் அறிமுகம்

டிவிஎஸ் (TVS) நிறுவனத்திடமிருந்து இருந்து எதிர்பார்க்கப்பட்ட புத்தம் புதிய பைக் அறிமுகமாகியிருக்கிறது. டிவிஎஸ் என்றால் நேரடியாக டிவிஎஸ் நிறுவனம் கிடையாது, டிவிஎஸ்ஸின் துணை நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Norton Motorcycles) இங்கிலாந்தில் தங்களுடைய புதிய 'மேங்க்ஸ் R' (Manx R) சூப்பர்பைக் மாடலை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பைக்கின் அனைத்து அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது அந்நிறுவனம்.

தமிழ்நாடே வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடிய ராயல் என்பீல்டு!

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னைதான் (Chennai) ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமையிடம் (Headquarters) ஆகும். எனவே இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் மட்டுமே அமைந்துள்ளன.
Advertisement

விஜய் ஆட்டியில் ஆவது சாலைகளில் இந்த மாற்றம் நடக்குமா?

சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது டெல்லியில் முழுவதுமாக டிஜிட்டலாக மாறியுள்ளது. அதாவது, விதிமீறல்களில் ஈடுப்படுவோரை சாலையெங்கிலும் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணித்து இ-செல்லானை இ-மெயிலுக்கு அனுப்பும் நடைமுறையை டெல்லியில் கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர். முன்னதாக நகரத்தின் முக்கியமான சாலைகளில் மட்டுமே இந்த முறையை பின்பற்றி வந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.