அடையாளமே தெரியாமல் மாறப்போகும் ஐ20 கார்!

ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 காரை விரைவில் அப்டேட் செய்து வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அப்டேட்டில் தள்போதுஉள்ள மாடலை அடையாளமே தெரியாத அளவில் மாற்றி, புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் இந்த கார் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பக்கத்துல இருக்க விநாயகர் கோவிலுக்கு கூட ரோல்ஸ்-ராய்ஸ் காரா!

அம்பானி குடும்பத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மீது அலாதி பிரியம் உண்டு என்பதை பலமுறை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அவர்கள் வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஆனந்த் அம்பானி சென்றுள்ளார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?

இந்தியாவில் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வெர்ஷன் ரயில்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வகிறது. BEMLநிறுவனம்இந்தியாவில் ஏற்கனவே 10 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கிறது.இது மட்டுமல்ல இந்தியா மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகள் இணைந்து Kinet என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் 120 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம்உருவாக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ரயில் பெட்டியில் உள்ள அம்சங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

கர்நாடகாவை பாத்து எல்லாரும் கத்துக்கணும்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா (Karnataka) உள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் உள்ள வலுவான உள்கட்டமைப்பு வசதிகள்தான் காரணம். கர்நாடக மாநிலத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன.
Advertisement

மாட்டு சாணத்தை எரிபொருளாக்கி ஓடும் கார் வெளியாகிறது!

மாருதி நிறுவனம் பெட்ரோல், சிஎன்ஜிக்கு மாற்றாக சிபிஜியில் இயங்கும் வாகனத்தை ஜப்பானில் காட்சிப்படுத்தப்படுத்தப்போகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்தியாவில் வெளியிட்ட விக்டோரிஸ் காரின் சிபிஜி வெர்ஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது? இது என்ன சிபிஜி? இதற்கும் சிஎன்ஜிக்கும் என்ன வித்தியாசம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சொந்த ஊருக்கு காஸ்ட்லீ ஆடி காரில் வந்து இறங்கிய மகன்!!

தீபாவளி மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நன்னாளில், பல்வேறு நகரங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று ஒளித்திருவிழாவைக் கொண்டாடுவார்கள். இவர்களில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் ஒருவர்.

7 பேர் ஒரே கார்ல போக இத்தனை கார் வருதா?

7 சீட்டர் கொண்ட எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. மக்கள் பலன் தராத வாகனங்களை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். பல்வேறு புதிய மாடல் கார்கள் இந்தியாவில் களமிறங்குகிறது. அதிக இட வசதி கூடுதல் வரிசை சீட்டுகள் மற்றும் அதிகமான பூட் வசதி காரணமாக இந்த ரக வாகனங்கள் அதிகமாக இந்தியாவில் விற்பனையாகிறது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்தடுத்து வர போகும் 7 சீட்டர் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் பட்டியலை காணலாம் வாருங்கள்.

ஒரே குடும்பத்தில் 8 ஆண்டுகளில் 6 கார்களை வாங்கிட்டாங்க!

கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரே குடும்பத்தில் 6 டாடா கார்களை வாங்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த குடும்பம் ஏன் டாடா மோட்டார்ஸ் வாகனத்தை அதிகம் விரும்புகிறது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

பைக் இரண்டின் விலைகளும் 2 லட்ச ரூபாய்க்குள் வந்தாச்சு!

சமீபத்திய ஜிஎஸ்டி திருத்தங்கள் ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகளுக்கு பெரும் பலனை அளித்துள்ளன. இவற்றின் என்ஜின் திறன் 349சிசி என்பதால், இவை ஜஸ்ட் மிஸ்ஸில் 'சப்-350சிசி' பைக்குகள் பிரிவில் வருகின்றன. இதேபோல், யெஸ்டி ரோட்ஸ்டரும் ஜிஎஸ்டி குறைப்பின் கீழ் விலை குறைப்பை பெறும் பைக்குகள் வரையறைக்குள் வருவதால், ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் என இரு பைக்குகளின் விலைகளும் குறைந்துள்ளன. ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு இவற்றின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

51 ஊழியர்களுக்கு சொகுசு கார் பரிசு!

தன் நிறுவனத்தில் பணியாற்றும் 51 சிறந்த ஊழியர்களுக்கு 51 சொகுசு கார்களை வாங்கி ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பரிசளித்த சம்பவம் சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. தீபாவளி முன்னிட்டு இவர் இந்த பரிசை வழங்கியுள்ளார். வழக்கமாக தீபாவளிக்கு போனஸ் கொடுப்பது சாதாரணமான விஷயம் தான். ஆனால் ஒருவர் தனது ஊழியர்களுக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்தது பலரை ஆட்சியைப் படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாய்க்குள் ஸ்பேர் சக்கரத்துடன் கிடைக்கும் கார்கள்!

இன்றைய கால கார்களில், குறிப்பாக ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட கார்களில், முழு அளவிலான ஸ்பேர் சக்கரங்கள் அரிதாகிவிட்டன. அதாவது, முந்தைய காலங்களில் காருக்கு பின்பக்கத்தில் வழங்கப்படுமே அந்த ஸ்பேர் சக்கரங்களை தான் சொல்கிறோம். காரின் உற்பத்தி செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், ஸ்பேர் சக்கரங்களுக்கு பதிலாக தற்காலிக ஸ்பேர் சக்கரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு இதை கிஃப்ட் பண்ணலாம்!

இந்தியாவில் தற்போது பாஸ்ட் டேக் கார்டுகள் அமலில் இருக்கும் நிலையில் பாஸ்ட் டேக் கார்டுகளில் பயன்படுத்துவதற்காக ஓராண்டுக்கான பாஸூம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. இதை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இனி இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த நபருக்கு பரிசாக வாங்கி கொடுக்கலாம் என்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. முன்பு அவரவர் செல்போனிலேயே இதை வாங்கிக் கொள்ள முடியும் என்று இருந்த ஆப்ஷன் தற்போது மாற்றப்பட்டு இதை மற்றவர்களுக்கு பரிசளிக்கும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த காரின் விலையை உயர்த்திய மாருதி!

மாருதி நிறுவனம் தனது விட்டோரிஸ் என்ற காரை கடந்த செப்டம்பர் மாதம் தான் அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், திடீரென அந்த காரின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், இந்த காரின் விலை ஏற்றம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யூடியூபில் சம்பாதித்தே ரூ 1.2 கோடிக்கு காரை வாங்கிய பிரபலம்

இந்தியாவில் பண்டிகை காலங்களில் பலர் வாகனங்களை வாங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். இந்த வகையில் வட இந்தியாவில் பிரபல யூட்யூபரான சமே ரெய்னா என்பவர் தீபாவளி கொண்டாடும் வகையில் ரூபாய் 1.2 கோடி மதிப்பிலான காரை சொந்தமாக வாங்கியுள்ளதாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவ்ளோ கம்மியான விலையில் ஸ்கோடா காரா! நம்பவே முடியல!

ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் கார்கள் சற்று பிரீமியம் தயாரிப்புகளாக கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட ஸ்கோடா நிறுவனத்திடம் இருந்து மிகவும் குறைவான விலையில் ஒரு கார் அறிமுகம் செய்யப்பட்டால், அதன் விற்பனை அனைவருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த கார்!

இந்திய சந்தையில் முன்பெல்லாம், மிகவும் விலை குறைவான மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போதெல்லாம் மிகவும் விலை குறைவான கார்களை வாடிக்கையாளர்கள் சீண்டுவதில்லை. அத்துடன் மைலேஜிற்கும் நிறைய பேர் முக்கியத்துவம் தருவது கிடையாது.
Advertisement

30 நாளில் 35 பேர் தான் இந்த காரை வாங்கிருக்காங்க

எம்ஜி நிறுவனம் தனது குளோஸ்டர் காரின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த கார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட கடந்த செப்டம்பர் மாதம் 88.4 சதவீதம் அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது இந்த கார் மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகியுள்ளது. பலர் இந்த காரை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைவான விற்பனையை பதிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சங்கிலியை இழுத்தால் டிரைவர் ரயிலை நிறுத்த மாட்டார்!!

இந்திய ரயில் பெட்டிகளில் அவசரகால சங்கிலிகள் வழங்கப்படுகின்றன என்பது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய போவது இல்லை. இவை, பயணிகள் அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவதற்கு உதவுகின்றன. இரயில் ஓட்டுநரும் (லோகோ பைலட்), கார்டும் ரயிலின் எதிரெதிர் முனைகளில் இருப்பதால், இந்த அமைப்பு மிகவும் அவசியமாகிறது.

தீபாவளிக்கு முந்தைய நாளில் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை!!

இந்தியாவின் வாகனச் சந்தையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனெனில், பொதுவாகவே தீபாவளியின் போதுதான் பலரும் தங்களது புதிய வாகனங்களை வாங்குவர். ஆனால் இந்த தீபாவளிக்கு இதுவரையில் எந்த ஆண்டிலும் இல்லாத உட்சப்பட்சமாக அதிக வாகனங்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

மாருதி 800 காரை இத்தனை வருஷம் வைத்திருந்ததே பெரிய விஷயம்!

மஹாராஷ்டிராவில் மாருதி 800 கார் ஒன்று, மஹிந்திரா தார் போல மாற்றியமைக்கப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான ஆஃப்-ரோடர் வாகனமான தார் போல, மாருதியின் குட்டி ஹேட்ச்பேக் காரான 800 மாற்றப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், பலரையும் கவர்ந்துள்ளது.
Advertisement

அவரை போலவே அழகான மெர்சிடிஸ் காரை வாங்கிய நடிகை!

இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை நியா ஷர்மா, புதிதாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சிஎல்இ53 கூபே காரை வாங்கியுள்ளார். தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஸ்ட்ராப்லெஸ் லெஹங்கா உடையில் வந்த நியா ஷர்மா, தனது புதிய கண்கவர் மஞ்சள் நிறத்திலான மெர்சிடிஸ் காரையும் அறிமுகப்படுத்தினார்.

க்ராஷ் டெஸ்ட் ரேட்டிங் வந்ததும் எல்லாமே தலைகீழா மாறி போச்சு

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த கார்கள் அதிக மைலேஜ் வழங்கி விட்டால், விற்பனை இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் குறைவான விலை மற்றும் நிறைவான மைலேஜ் என்ற வாடிக்கையாளர்களின் 2 முக்கியமான எதிர்பார்ப்புகளையும் ஒரு சேர பூர்த்தி செய்தாலும் கூட, ஒரு சில கார்கள் மட்டும் விற்பனையில் சோபிக்க தவறுகின்றன.

வளைஞ்சி தப்பிச்சு போனாலும் இனி விரட்டி விரட்டி புடிப்பாங்க!!

இந்தியாவில் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்கும் நோக்கத்துடன், 2050ஆம் ஆண்டிற்குள் விபத்தில்லா சமூகத்தை உருவாக்கும் ஹோண்டாவின் உலகளாவிய தொலைநோக்கு பார்வையுடன், ஹோண்டா இந்தியா அறக்கட்டளை (HIF) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

3 நாளில் 1 லட்சம் கார்கள் டெலிவரியா?

பண்டிகை காலங்களில் வழக்கமாக வாகன விற்பனை அதிகமாக இருக்கும். அதன்படி இந்த தீபாவளிக்கு இந்தியா முழுவதும் வாகன விற்பனை மிக அதிகமாக இருந்துள்ளதாக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளனர். தீபாவளியை குறிவைத்து பலர் புதிதாக வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களுக்கான டெலிவரிகள் தற்போது நடந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் வாகனங்களின் விலை குறைந்தது தான் என கூறுகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

மாருதி 800 கார்னு சொன்னா மாருதி கம்பெனி கூட நம்பாது!

கார் மாடிஃபிகேஷன்கள் அண்மைக்காலமாக ஒரு விவாதப் பொருளாக மாறி வருகின்றன. இந்த வகையில், மாருதி 800 கார் ஒன்று இங்கு முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு, இரண்டு கதவுகள் கொண்ட திறக்கக்கூடிய மேற்கூரை உடன் காட்சியளிக்கிறது. இதனால் பலரால் இது மாருதி 800 என்பதையே நம்ப முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.