டிவிஎஸ் வெளியிட்டுள்ளது புதிய ஸ்கூட்டர்

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக டிவிஎஸ் ஜூப்பிட்டர் இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் 125 சிசி மாடலை புதிய நிறங்களுடன் அப்டேட் செய்துள்ளது டிவிஎஸ். இதுவரை நாம் பார்க்காத வகையில் தனித்துவமாக இருக்கின்றன இந்தப் புதிய நிறங்கள். இந்தப் புதிய நிறங்களுடன் இனி ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரை 11 வகையான நிறத் தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

2வது திரைப்படத்தை ஹிட் ஆக்கிய இயக்குனருக்கு கார் பரிசு!

டொயோட்டா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான பிரெஸ்ஸா கார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இதனை சினிமா தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடன் பணியாற்றிய இயக்குனருக்கு பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் வாங்கிய புதிய கார்...!

மஹிந்திரா தார் ஆனது இந்தியாவின் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக விளங்குகிறது. இதனாலேயே 3 கதவுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த தார் வாகனத்தை 5 கதவுகளுடன் தார் ராக்ஸ் என்கிற பெயரில் கடந்த 2024ஆம் ஆண்டில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இந்த அறிமுகத்திற்கு பின் தார் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

பஜாஜ்க்கு போட்டியாக ஸ்கூட்டர் உருவாக்குறது பெரிய விஷயம்!

ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3வது ஜென்ரேஷன் அப்கிரேட் உடன் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு என்பதை சமீபத்தில் விரிவான ரிவியூவாக நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்த தொகுப்பில் என்ன பார்க்க போகிறோம் என்றால், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேத்தக் 3501 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில் புதிய ரிவர் இண்டீ எந்த அளவிற்கு சிறந்ததாக விளங்குகிறது என்பதை பற்றி ஆகும்.
Advertisement

எலக்ட்ரிக் சைக்கிள்: ₹30,000-க்குள் சிறந்த 5 மாடல்கள்!

தினசரி நகரப் பயணங்களுக்கு மலிவான எலக்ட்ரிக் சைக்கிள் தேடுகிறீர்களா? 30,000 ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த 5 மாடல்களை இங்கே கண்டறியுங்கள். Discover the top 5 affordable electric cycles in India under ₹30,000 for eco-friendly and budget-friendly commuting.

வெறும் அஞ்சரை லட்சத்துக்கு 7 பேர் போற கார்!

இந்தியாவின் 7 சீட்டர் எம்பிவி கார் (7 Seater MPV Car) செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரில் இதை எல்லாம் எதிர்பார்க்கவே இல்ல!

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.11.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதையும், பழைய சிட்டி உடன் ஒப்பிடுகையில் எந்த அளவிற்கு மேம்படுத்தப்பட்டு உள்ளது என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொகுப்பில் காணலாம்.

விஜய் பூவே உனக்காக நடிக்கறதுக்கு முன்னாடில இருந்து இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor). ஹீரோ ஸ்பிளெண்டருக்கு தற்போது 32 வயதாகிறது. ஆம், இது கடந்த 1994ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பைக் ஆகும். விஜய்யின் (Vijay) பூவே உனக்காக (வெளியான ஆண்டு 1996) திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே ஹீரோ ஸ்பிளெண்டர் விற்பனையில் இருந்து வருகிறது.
Advertisement

எஸ்யூவி விற்பனையில் முன்னணியில் மஹிந்திரா

எஸ்யூவி பிரிவிலேயே கணிசமான அளவில் கார்கள் விற்பனை செய்யும் பிரிவாக 4.5 மீ முதல் 4.8 மீ வரையிலான எஸ்யூவி பிரிவு இருந்து வருகிறது. செடான்களுக்கு இணையான அளவில் இந்தப் பிரிவில் இந்தியாவில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், செடான்கள் குறைவான விலையில் இருந்த கிடைக்கின்றன. ஆனால் இந்த 4.5மீ அளவிற்கு மேலான எஸ்யூவிக்கள் சற்று ப்ரீமியமாக அதிக விலையிலேயே விற்பனை செய்யப்பட்ட வருகின்றன.

ஹோண்டா சிட்டியை 12 லட்சத்தில் வாங்குவதற்கு பதில் இது பெஸ்ட்!

ஹோண்டா நிறுவனத்தில் இருந்து புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் எப்போதுமே சிறப்பாக விற்பனையாகும் ஹோண்டா சிட்டி காருக்கு புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது. விற்பனையில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் வழக்கம்போல் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை விட சிறந்ததா புதிய பஜாஜ் பல்சர்?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் என்160 பைக்கை மேம்படுத்தி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் 160சிசி பைக் மார்க்கெட்டில் போட்டி வலுத்து வருவதால் அதனை சமாளிக்க பல்சர் என்160 பைக்கிற்கு புதிய அப்கிரேட்களை பஜாஜ் வழங்கியுள்ளது. குறிப்பாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் புதிய பல்சர் என்160 பைக்கிற்கு வழக்கம்போல் பெரிதும் சவாலாக இருக்கும்.

மெட்ரோ ரயில் சேவையில் நியூயார்க்கை பின்னுக்கு தள்ளும் டெல்லி

இந்தியர்களின் அன்றாட போக்குவரத்தில் மெட்ரோ இரயில்கள் முக்கியமானதாக மாறி வருகின்றன. ஒவ்வொரு நாளும் பல இலட்சக்கணக்கிலான இந்திய மக்கள் மெட்ரோ இரயில்களை பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் மட்டுமே தற்போதைக்கு மெட்ரோ இரயில் சேவை உள்ளது; அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Advertisement

அதிகம் விற்பனையாகும் ஹோண்ட பைக் இது தான்

MSX125 குரோம் (MXS25 Grom) என்ற மினி பைக்கை 2026ம் ஆண்டிற்காக அப்டேட் செய்துள்ளது ஹோண்டா. இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் இந்த மினி பைக்கைப் பார்த்தவுடன் உங்களுக்கு வேறொரு பைக்கின் ஞாபகம் வர வேண்டுமே. சரி தான், ஹோண்டாவின் நவி (Honda Navi) தான் அது. இந்த குரோம் பைக்கின் அடிப்படையில் தான் நவியை உருவாக்கி இந்தியாவில் விற்பனை செய்தது ஹோண்டா.

2026 பஜாஜ் பல்சர் என்160 vs ஹோண்டா எஸ்பி160

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து புதியதாக 2026 பல்சர் என்160 பைக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே விற்பனையில் இருந்த பல்சர் என்160 பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றத்தில் மாற்றங்களுடனும், புதிய தொழிற்நுட்ப அம்சங்களுடனும் மேம்படுத்தப்பட்டுள்ள பல்சர் என்160 ஆனது விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தின் எஸ்பி160 பைக்கிற்கு நேரடி போட்டியாக விளங்குகிறது.

இந்தியாவில் ஹோண்டா புதிதாக வெளியிடும் கார்கள் இவை தான்

சில தினங்களுக்கு முன்பு தான் சிட்டி ஃபேஸ்லிப்ட் வெளியிட்டை, ZR-V என்ற புதிய ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. இந்தியாவிற்கான அந்நிறுவனத்தின் திட்டத்தின் முதலிரண்டு கார்களாக இவை வெளியாகியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இன்னும் நான்கு கார்களையும் திட்டத்தில் வைத்திருக்கிறது ஹோண்டா. அது குறித்து இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

4.5 லட்ச ரூபாயில் விற்கப்படும் காரை அப்கிரேட் செய்யும் டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற மே 28ஆம் தேதி புதிய மேம்படுத்தப்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் டியாகோ காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்பக்கத்தில் என்னென்ன புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை சில தினங்களுக்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
Advertisement

வெறும் 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் எரிபொருள்!

இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Diesel Price Hike) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், பால், காய்கறி, மளிகை சாமான்கள் என அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் உயரும். எனவே இந்திய மக்கள் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சிப் தட்டுப்பாடு: கார் உற்பத்தியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

உலகளாவிய சிப் தட்டுப்பாடு மற்றும் வாகனத் துறையைப் பாதிக்கும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு மத்தியில், சில சீன செமிகண்டக்டர் சப்ளையர்கள் மீதான தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்துமாறு ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். European carmakers urge EU to lift sanctions on Chinese chip suppliers, fearing production halts due to chip shortage.

இந்த ஸ்போர்ட்டியான 125 சிசி ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும்?

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் எதுவென்று தெரியுமா. சந்தேகத்திற்கு இடமின்றி அது டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq) தான். எரிபொருள் ஸ்கூட்டர்களில் நான்காவது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக இருந்து வருகிறது என்டார்க். ஒட்டுமொத்தமாக எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என அனைத்தையும் எடுத்துக் கொண்டால், ஆறாம் இடத்தில் இருக்கிறது.

புதிய ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி?

ஜப்பானை சேர்ந்த யமஹா உலகளவில் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆகும். அப்படிப்பட்ட யமஹா நிறுவனம் இந்தியாவில் பெங்களூருவை சேர்ந்த ஒரு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்த்து தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது என சொன்னால் நம்ப முடிகிறது. அவ்வாறு யமஹாவை வசீகரித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் ரிவர் இண்டீ ஆகும்.
Advertisement

விக்கவே விக்காதுனு சொன்ன கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). இது இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கிரெட்டா எஸ்யூவியில் ஹூண்டாய் கொடுக்கும் புதிய வசதி

இந்தியாவில் ஹூண்டாயின் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக இரண்டாம் தலைமுறை கிரெட்டா எஸ்யூவி தற்போது இருந்து வருகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது ஹூண்டாய். மூன்றாம் தலைமுறையாக அப்டேட் செய்யப்படவிருக்கும் புதிய கிரெட்டா எஸ்யூவி குறித்த தகவல்கள் நமக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்தியாவில் 7 புதிய பைக்குகளை வெளியிட்ட நிறுவனம்

இந்தியா உட்பட சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் பல்வேறு பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளை ட்ரையம்ப் நிறுவனம் அப்டேட் செய்தது. தற்போது அந்த அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை மொத்தமாக இந்தியாவில் வெளியிட்டுள்ளது. தற்போது 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஸ்பீடு ட்வின் 1200 கஃபே ரேஸர் எடிஷன், போனவில் T120, போனவில் பாபர், போனவில் ஸ்பீடு மாஸ்டர், டைகர் 900 சிறப்பு எடிஷன் மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 RX ஆகிய பைக்குகளை இந்தியாவிலும் வெளியிட்டுள்ளது ட்ரையம்ப்.

குழந்தை இருக்கும் காரில் இது கண்டிப்பாக இருக்க வேண்டும்!!

கேரளாவில் காரில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை விபத்தின்போது உயிரிழந்த செய்தியை சமீபத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கேரளாவின் மலப்புரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கார் டேங்கர் லாரி மீது மோதியதில், காரினுள் ஏர்பேக் விரிவடைந்ததினால் அந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த உயிரிழப்புக்கு காரணம் குழந்தையின் பெற்றோர்களே ஆவர். ஏனெனில், கார்களிலும், பைக்குகளிலும் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

காரை கழுவுவதில் தான் நிறைய பேர் தப்பு பண்றாங்க!!

புதியதாக காரை வாங்குவதை காட்டிலும் அதனை முறையாக பராமரிப்பது தான் பெரிய வேலை ஆகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்தால், கார் எப்போதும் போல் சீராக இயங்கும். குறைந்தப்பட்சம், அவ்வப்போது காரை கழுவி சுத்தமாக வைத்திருக்க முயலுங்கள். காரை சுத்தம் செய்வதில் சில சந்தேகங்கள் சிலருக்கு இருக்கலாம். அதாவது, காருக்கு கொடுக்கப்பட்ட ஆயில்களையும் சுத்தம் செய்யும்போது முற்றிலுமாக அகற்றிவிட வேண்டுமா போன்ற கேள்விகள் எழலாம். அவற்றிற்கான பதில்களை தான் இந்த தொகுப்பில் இனி பார்க்க போகிறோம்.