காஸ்ட்லீயான ஜீப் காரில் கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாங்க!!

கார்களில் சன்ரூஃப் (Sunroof) வழங்கப்படுவது என்பது ஒரு காலத்தில் ஆடம்பர விஷயமாக இருந்த நிலையில், சமீப காலத்தில் அது அத்தியாவசியமானதாக மாறி உள்ளது. இன்றைய காலத்தில் கார் வாங்குபவர்கள் தாங்கள் வாங்கும் காரில் சன்ரூஃப் இருக்கிறதா என்பதைதான் முக்கியமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனாலேயே, கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் தாங்கள் விற்பனை செய்யும் அனைத்து கார்களிலும் சன்ரூஃப் வசதியை வழங்க முயற்சிக்கின்றன.

செப் 2ல் ஹோண்டா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு!

ஹோண்டா நிறுவனம் விரைவில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பைக் 500 சிசி பைக் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விரைவில் இந்த பைக்கை வெளியிட திட்டமிட்டுள்ளது. வரும் செப் 2ம் தேதி இந்த பைக் வெளியிடப்படுகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கம்மி ரேட்ல ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வரப்போகுது!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த விலையில் என்ட்ரி லெவல் பைக்காக "ஸ்பிரின்ட்" என்ற பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த பைக் இந்தாண்டு இறுதிக்குள் வெளியிடப்பட்டு அடுத்தாண்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாயில் இவ்வளவு பெரிய காரை கொண்டுவந்ததன் பலன்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சி கவனிக்கத்தக்க அளவில் உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனமும், எம்ஜி மோட்டார் நிறுவனமும் இணைந்த பின்பே இந்த துரிதமான முன்னேற்றம் கை கூடியுள்ளது என சொல்ல வேண்டும். இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 ஜூலை மாதத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை எம்ஜி பதிவு செய்துள்ளது. அதனை எம்ஜி நிறுவனமே புள்ளி விபரங்கள் உடன் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
Advertisement

1 லட்ச ரூபா ரேஞ்சுல ராயல் என்பீல்டு பைக்கா!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு (Royal Enfield Bikes) மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது.

தந்தையை சர்பிரைஸ் பண்ண குடும்பத்தின் முதல் காரை வாங்கிய மகன்

குடும்பத்தில் முதல் கார் வாங்குவது எப்போதுமே ஸ்பெஷலான ஒன்றாகும். இன்றைய கால உலகில் கார்கள் மிகவும் அத்தியாவசியமானதாக மாறி உள்ளதால், வீட்டிற்கு ஒரு கார் தேவை என்பது கட்டாயமாகி வருகிறது. அதுவும், குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசு குடும்பத்தின் முதல் காரை வாங்குகிறார் என்றால் அது உணர்ச்சி மிகுந்த விஷயமாகும்.

நாடே எதிர்பார்த்த காரின் டெலிவரியை துவங்கிய மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களின் பேக் 2 வேரியன்ட்களில் டெலிவரி துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த காரின் பேக் 3 வேரியன்ட் ஏற்கனவே டெலிவரி செய்யப்படும் நிலையில் தற்போது பேக் 2 வேரியன்டின் டெலிவரி துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

31 நாளில் 1.13 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க

சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை விற்பனை செய்து கம்பேக் குடுத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 31 நாளில் 1.13 லட்சம் டூவீலர்களை விற்பவனை செய்துள்ளது. ரோட்டுல இந்த கம்பெனி வண்டி ஓடுவது போலவே தெரியவில்லை ஆனால் இவ்வளவு வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த கார் மறுபடியும் வரப்போகுதா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). முன்பு இந்த காரில் குரோ எடிசன் (Kuro Edition) என்ற ஸ்பெஷல் எடிசன் மாடல் ஒன்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும் நிஸான் மேக்னைட் காரின் குரோ எடிசன் தற்போது விற்பனையில் இல்லை.

உள்ளே இருந்தவர் யார்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் பெரிய ஷாக்

மாருதி ஆல்டோ (Maruti Alto) காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த கார், மாருதி ஆல்டோ ஆகும். குறிப்பாக, மிடில்-கிளாஸ் மக்களின் கார் கனவை நிஜமாக்கிய கார் மாருதி ஆல்டோ ஆகும். ஆரம்பத்தில் மாருதி 800 என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்த மாருதி ஆல்டோ கார் ஆனது இப்போதும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 என்கிற பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவை மாற்றும் டெஸ்லா!

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று, அவற்றை விரைவாக சார்ஜ் செய்வதற்கான ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதிகள் நாடு முழுவதும் பரவலாக இல்லாதது ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டுவர ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்பட சில தனியார் நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

30 நாளில் 4.5 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 4.5 லட்சம் வாகனங்களை தயாரித்து மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

அடி மாட்டு விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்!

நடப்பு 2025ம் ஆண்டின் ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதத்திற்குள் நாம் நுழைந்துள்ளோம். இந்த நேரத்தில் ஜூலை மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales reports) தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் கியா (Kia) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது.

மீண்டும் மாருதிக்கு அடுத்து 2வது இடத்தில் மஹிந்திரா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சி ஆனது மிகவும் ஆச்சிரியப்படும் வகையில் உள்ளது. குறிப்பாக, 2025ஆம் ஆண்டு பிறந்ததே மஹிந்திராவுக்கு தான் என்பது போல், ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களை முந்தி ஆச்சிரியப்படுத்தி வருகிறது. இது நடந்து முடிந்த ஜூலை மாத விற்பனையிலும் எதிரொலித்து உள்ளது.

மனைவிக்கு கணவன் குடுத்த பெரிய சர்ப்ரைஸ்!

புதிய கார் வாங்கும்போது, நிறைய ஷோரூம் படிகளில் ஏறி, இறங்கி, விலை மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட தகவல்களை எல்லாம் விசாரித்து விட்டு வருவதே மனதிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கும். இதற்கு அடுத்தபடியாக டெஸ்ட் டிரைவ் செய்ய செல்லும்போது, அந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகும்.

173 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

மாருதி நிறுவனம் தனது சொடன் காரான சியாஸ் காரின் உற்பத்தியை கடந்த ஏப்ரல் மாத துவக்கத்திலேயே நிறுத்தியதாக கூறப்படும் நிலையில் இதுவரை ஸ்டாக் தீரவில்லை. கடந்த ஜூலை மாதம் கூட இந்த காரின் விற்பனை நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

எம்ஜி சைபர்ஸ்டர் எலக்ட்ரிக் கார் ஓட்ட எப்படி இருக்கு?

எம்ஜி சைபர்ஸ்டர் இந்தியாவில் அறிமுகம். ரூ.75 லட்சம் விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ரோட்ஸ்டர். சிறப்பம்சங்கள், ஓட்டுநர் அனுபவம், செயல்திறன் மற்றும் விமர்சனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

டாடாக்கு விழுந்த மரண அடி! சேல்ஸ் இப்படி சறுக்கிடுச்சே!

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 39,521 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு விற்பனையை விட குறைவாக இருந்தாலும் கடந்த ஜூன் மாத விற்பனையை விட விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார் ஓனரின் கண் முன்னே சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க!

இன்றைய இந்தியாவில் திருமண நிகழ்ச்சிகள் பல விதங்களில் பரிணாம வளர்ச்சியை கண்டுவிட்டன. சடங்குகள், சம்பிரதாயங்கள் பாரம்பரிய முறைப்படி நடந்தாலும், அவற்றை சுற்றி நடக்கும் விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. அந்த வகையில், மாப்பிள்ளை மட்டுமின்றி அவரது நண்பர்கள் மற்றும் சகோதரர்களும் ஒரே மாதிரியான உடையில் திருமணத்தில் கலந்து கொள்வது, மணமகன் அழைப்பின் போது சுவாரஸ்யமாக எதாவது செய்வது என மற்றவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

போலீசாருக்கு எம்.எல்.ஏ வாங்கி கொடுத்த 3 லட்ச ரூபா பைக்!

குற்றவாளிகளை பிடிக்க வேண்டுமெனில், அவர்களை காட்டிலும் போலீசார் ஒருபடி முன்னோக்கி இருக்க வேண்டியதாக உள்ளது. இதனாலேயே போலீசாரும் அதிவேகத்தில் இயங்கக்கூடிய கார் & பைக்குகளை பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. துபாய், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எல்லாம் லம்போர்கினி (Lamborghini), ஃபெராரி (Ferrari) கார்களை பயன்படுத்தக்கூடிய போலீசார்காரர்களை கூட சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
Advertisement

வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல 6 பேர் போற காரா!

இந்திய சந்தையில் குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை வாங்க வேண்டும் என்றால், பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி ஈக்கோவாகதான் (Maruti Suzuki Eeco) இருக்கும். இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

தப்பி பிழைத்து பார்டரை கிராஸ் செய்த மாருதி!

மாருதி நிறுவனம் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் 1,37,776 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் வருடாந்திரமாகவும், மாதாந்திரமாகவும் விற்பனையை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏரியாவில் முதல் ஆளா நீங்க வாங்கி போடுங்க... யமஹா எம்டி-15

யமஹா (Yamaha), ஜப்பானை சேர்ந்த முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் நீண்ட காலமாக பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய பைக்குகளுள் ஒன்றாக எம்டி-15 (MT-15) விளங்குகிறது. பிரபலமான, யமஹா ஆர்15 (R15) பைக்கின் நேக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் வெர்சனாக விளங்கும் எம்டி-15 பைக்கில் ஆர்15-இன் அதே 155சிசி என்ஜின் தான் பொருத்தப்படுகிறது.

இந்த கார்ல போனா ஊரே உங்களை தான் திரும்பி பார்க்கும்!

வால்வோ நிறுவனம் இந்தியாவில் தனது அப்டேட் செய்யப்பட்ட 2025 வால்வோ எக்ஸ்சி 60 காரை இந்திய மார்கெட்டி்ல அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ71.9 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.இதில் சில காஸ்மெட்டிக்ஸ் மாற்றங்களும், அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

மக்கர் பண்ணாம 10 லட்சம் கிலோ மீட்டர் ஓடுது!

இந்திய சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டத்தை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக டொயோட்டா (Toyota) திகழ்கிறது. டொயோட்டா நிறுவனம் நம்பகத்தன்மை வாய்ந்த உயர் தரமான கார்களை விற்பனை செய்து வருவதுதான் இதற்கு காரணம். இதனால் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டொயோட்டா நிறுவனம் பதிவு செய்து வருகிறது.