விமானங்களில் பைலட்கள் ஓய்வு எடுக்கும் காம்பார்ட்மெண்ட்டானது, முதல் வகுப்பிற்கு மேலே காக்பிட்டிற்கு பின்னால் அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான விமானங்களில் பைலட்கள் ஓய்வு அறை இங்குதான் உள்ளது. எனவேதான் நம்மை போன்ற பயணிகளால் அவற்றை காண முடிவதில்லை. படிக்கட்டு அல்லது ஏணியில் ஏறுவதன் மூலமாக பைலட்களால் இந்த ஓய்வு அறைக்கு செல்ல முடியும்.
பயணிகளின் பயத்தை போக்குவதற்காகதான் விமானங்களில் நீல நிற இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது நீல நிறம் நமது மனதில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்குவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விமானங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்ற உணர்வுகள் கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. ஏரோபோபியாவை எதிர்த்து போரிட இது உதவி செய்யும்.
ஆரம்பத்தில் ஜேசிபி இயந்திரங்கள் வெள்ளை, சிகப்பு நிறத்தில்தான் இருந்தன. ஆனால் பின் நாட்களில் அவர்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறி விட்டனர். இந்த நிறம் காரணமாக பகல் அல்லது இரவு என எந்நேரம் என்றாலும் ஜேசிபி இயந்திரம் பார்வைக்கு எளிதாக புலப்படும். இதுவே இந்த நிறத்திற்கான காரணம். இதன் மூலம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒருவரால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.